கொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா!
நியூயார்க்: கொரோனா காலம் முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என பாகிஸ்தான் கல்வி ஆர்வலரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசப்ஸாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளி செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் கல்விக்காக பாடுபட்டவர் மலாலா. இவர் தலிபான் பயங்கரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உயிர் தப்பினார்.

நோபல் பரிசு
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக அவர் பாடுபட்டு வருகிறார்.

கூட்டு முயற்சி
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் கொரோனா பாதிப்பால் பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2 கோடி
நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படலாம். பெண்கள் கல்விக்கான இலக்கை எட்டுவதில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த அளவே சாதிக்க முடிந்து இருக்கிறது. உலகளவில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு ஆண்டிற்கு 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என அவர் கூறினார்.

கல்வி நிறுவனங்கள்
பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது, உலகில் உள்ள மாணவர்களில் 94 சதவீதம் பேரை பாதித்துள்ளது. கல்வி கட்டமைப்பு வரலாற்றில் கொரோனா தொற்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 190 நாடுகளில் 1.6 பில்லியன் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஐநா கடந்த மாதம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications