கதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்!
அமெரிக்காவில் வீட்டின் கதவை திறந்த பெண்ணின் தலையில் பாம்பு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டின் கதவை திறந்த பெண்ணின் தலையில் பாம்பு விழுந்த விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டியன் மிச்செல். இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீடு திரும்பினார். கை பையில் இருந்து சாவியை எடுத்து வீட்டின் முன்பக்க கதவை திறந்தார்.
மிச்செல் உள்ளே நுழைந்த போது மேலே இருந்து ஒரு பாம்பு அவர் தலையில் விழுந்தது. பாம்பை பார்த்த மிச்செல், அதிர்ச்சியில் உறைந்துபோனார். மிச்செலின் தலையில் விழுந்த பாம்பு, பின்னர் நழுவி அவரது காலில் விழுந்தது.

துடைப்பம்
டக்கென சுதாரித்து கொண்ட மிச்செல், அவரது கணவரை உதவிக்கு அழைத்தார். ஆனால் கணவர் வருவதற்கு முன்னதாகவே வீட்டில் இருந்த துடைப்பத்தை எடுத்து வந்து, பாம்பை வெளியே தள்ளிவிட்டுவிட்டார். சுமார் 10 இன்ச் நீளம் கொண்ட அந்த குட்டிப் பாம்பு, தன் வழியை பார்த்துகொண்டு சென்றுவிட்டது.

விஷமற்ற பாம்பு
"பாம்பு முதலில் எனது தலையில் விழுந்தது. பின்னர் காலில் விழுந்து ஊர்ந்து சென்றது. பின்னர் என்னை கடிக்க முயன்றது. அது விஷத்தன்மையற்ற சாரைப் பாம்பு என தெரிந்துகொண்டேன். துடைப்பத்தை எடுத்து அதை தள்ளிவிட்டுவிட்டேன். அந்த பாம்பை அடித்து கொல்ல எனக்கு மனமில்லை", என நடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறார் கிறிஸ்டியன் மிச்செல்.

பிட்சர் தான் காரணம்
மிச்செல் வீட்டில் உள்ள பிட்சர் எனப்படும் ஒருவகை செடியின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக தான் அந்த பாம்பு அவரது வீட்டில் நுழைந்திருக்கிறது. இருப்பினும் அந்த செடி தனக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் அதனை வெட்ட மிச்செல் விரும்பவில்லை. மீண்டும் பாம்பு வந்தாலும் பரவாயில்லை என்கிறார் மிச்செல்.

பல்லிக்கே பதறுவோம்
நம்மூரில் தலையில் பல்லி விழுந்தாலே பதறிப் போவோம் நாம். ஆனால், பாம்பே விழுந்தபோதும், பதறாமல் நிதானமாகச் சிந்தித்து, விஷமில்லாத பாம்பு என்பதால் அதனைக் கொல்லாமல் மனிதநேயத்துடன் விரட்டி விட்டுள்ளார் இப்பெண். உண்மையிலேயே கெத்து தான்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications