Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பேராபத்து".. உருகுதே, உயருதே.. அண்டார்டிகாவில் பனிபரப்பு குறையுது.. ரெடியா இருங்க.. என்னாது சுனாமியா

இந்த ஆண்டிற்கான பனி அளவில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அண்டார்டிகா பனிக்கடல் மறுபடியும் உருகி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது... இதுகுறித்து விஞ்ஞானிகள் அறிக்கை ஒன்றையும் விடுத்து கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

அதாவது, இந்த ஆண்டிற்கான பனி அளவில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்... பொதுவாகவே, வெப்பமயமாதல் உலகம் முழுவதும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது..

பருவநிலை மாற்றங்கள், பனிக்கட்டிகள் உருகுதல், காட்டுத்தீ, கடல் மட்டம் அதிகரிப்பு இப்படி பல்வேறு சவால்களுக்குள் நாம் சூழ்ந்துள்ளோம்.

வார்னிங்

வார்னிங்

அதுமட்டுமல்ல, நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கு இதே சவால்கள் முன்நிற்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும், தினம் தினம் எகிறி சிக்கலானதாகி மாறிவிடும் என்றும், அதை கையாள்வதற்கு கடினமானதாகவும் மாறக்கூடும் என்றும் ஏற்கனவே ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்படையும் நிலையில் வாழ்ந்து வருகிறார்களாம்..

 சமாளிப்பு

சமாளிப்பு

இன்னும் சில வருடங்களில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும்பட்சத்தில், தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்களும், மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.. குறிப்பாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிர காலநிலை பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், காலநிலை மாற்றம் அல்லாத பிரச்சனைகளும் சேர்ந்தே நிகழும்போது, அவைகள் சமாளிக்க முடியாத பிரச்சனையாக மாறக்கூடும் என்றும், அதுபோன்ற சமயங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு சில புதிய பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள்.

பனிக்கட்டி

பனிக்கட்டி

அந்தவகையில், இப்போது இன்னொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையமானது, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்து, வருடந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது... பொதுவாக, இந்த அண்டார்ட்டிக் பெருங்கடலானது மிகப்பெரிய பனிப்பாறைகளையும், பனிக்கட்டிகளையும் கொண்டதாகும்.. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்..

 கடல்பனி அளவு

கடல்பனி அளவு

இதன்காரணமாகவே, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்த அறிக்கையை வருடந்தோறும், தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான அறிக்கையும் கடந்த 13ம் தேதி வரை கணக்கிடப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சென்ற வருடம் பிப்ரவரி 25 வரையிலான கணக்கெடுப்பில் 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது... ஆனால், இந்த வருடம், அண்டார்டிகா கடல் பனி அளவு 1.91 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது...

 பேராபத்து

பேராபத்து

கடந்த ஆண்டுகளில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 3 வரை பனி அளவு கடுமையாக சரிந்துள்ளது... கடந்த 2 வருடங்களாகவே தொடர்ந்து பனி பரப்பு குறைந்து வருவது, பல்வேறு சூழலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.. கடல் மட்டம் உயர்வால் சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் அந்த அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளனர்.. இந்த அண்டார்டிகாவில் கடல் பனியின் அளவு, தொடர்ந்து 2-வது ஆண்டாக குறைந்துள்ளதுடன், பனி அளவில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால், சுனாமி உள்ளிட்ட பிரச்சனைகள் வரக்கூடும் என்று கவலை நிறைந்த எச்சரிக்கையை ஆய்வாளர்கள் விடுத்துள்ளது கலக்கத்தை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+