Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OpenAI முறைகேடு.. அம்பலப்படுத்திய இந்திய இளம் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் மர்ம மரணம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இதில் நடக்கும் முறைகேடுகள் வெளியில் அவ்வளவாக தெரிவதில்லை. இப்படியான மோசடிகள் குறித்து பகிரங்கமாக பேசியவர்தான் இந்திய-அமெரிக்க இளம் ஆராய்ச்சியாளரான சுசீர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் தனது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்திருக்கிறார்.

இந்தியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்துவந்திருக்கிறார். OpenAI-ல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது ChatGPT-ஐ உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறார். இது தவிர WebGPT மற்றும் GPT-4 போன்ற பிற திட்டங்களிலும் வேலை பார்த்திருக்கிறார்.

openai suchir balaji

இவ்வளவு பெரிய பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் இதை வைத்து மேலும் பெரிய நிறுவனத்தில் சேர்ந்து காசு பார்ப்பார்கள். ஆனால் சுசீர் பாலாஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சனையை மக்கள் மத்தியில் பேச தொடங்கியிருக்கிறார். தனக்கான அனுபவத்தை மக்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அதாவது காப்புரிமை தரவை OpenAI நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு டெக் உலகில் தலைப்பு செய்தியாக மாறியது. இந்த விவகாரம் குறித்து சுருக்கமாக சொல்வதெனில், OpenAI-ல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அது பதிலளிக்கிறது. அந்த பதில் எங்கிருந்து பெறப்படுகிறது? பெரும்பாலும் ஆய்வு முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. எனவே இந்த ஆய்வை செய்தவரிடம் காசு கொடுத்து அந்த முடிவுகளை வாங்க வேண்டும். ஆனால் OpenAI இதை செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

OpenAI-ல் நாம் ஒரு படத்தை கேட்கிறோம் எனில், அது கிராபிக்ஸ் பயன்படுத்தி வரைந்து கொடுக்கும். ஆனால் உலகம் முழுவதும் இதுவரை எடுக்கப்பட்டு இன்டெர்நெட்டில் பதிவேற்றப்பட்ட படங்களை சற்று எடிட் செய்துதான் OpenAI கொடுக்கும். அப்படியெனில் OpenAI கொடுக்கும் கிராப்பிஸ் படங்களுக்கு மூலாதாரம் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படங்கள்தான். இந்த படங்களுக்கு காப்பிரைட் வாங்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் OpenAI செய்யவில்லை என்று சுசீர் பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.

வணிகங்கள், தொழில்முனைவோரை இந்த OpenAI கடுமையாக பாதிக்கிறது. OpenAI தகவல்கள் ChatGPT ஐப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், "நான் சொல்வதை நீங்களும் நம்பினால், இந்நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். இது ஒட்டுமொத்த இணைய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒன்று கிடையாது" எனவும் சுசீர் கூறியிருந்தார். இதுதான் அவருடைய கடைசி ஸ்டேட்மென்டாக இருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் சலசலப்பை கிளப்பியிருந்த நிலையில் கடந்த நவம்பர் 26ம் தேதி தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் குறித்து உரிய விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+