Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே இரவில்.. அடுத்தடுத்து செத்து மடிந்த 30 லட்சம் தேனீக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் கலிபோர்னியா ஒரே இரவில் மூன்று மில்லியன் தேனீக்கள் இறந்ததன் பின்னணியில் உள்ள மர்மத்தை அமெரிக்க அதிகாரிகள் இறுதியாக கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு சான் டியாகோவில் உள்ள சரணாலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மூன்று மில்லியன் தேனீக்கள் ஒரே இரவில் மரணம் அடைந்தது. ஒரே இரவில் இப்படி தேனீக்கள் மரணம் அடைந்து கீழே விழுந்துள்ளன.

Reason behind the demise of 30 lakhs bees in USA found finally

அங்கே உள்ள தேனீக்கள் சரணாலயத்தில் அப்படியே மொத்தமாக செத்து விழுந்துள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 30 லட்சம் தேனீக்கள் செத்து விழுந்துள்ளன.

தேனீக்கள் எப்படி அழிந்தது?: இப்படி தேனீக்கள் அழிந்ததை அடுத்து, அமெரிக்க விவசாயத் துறை (USDA) செப்டம்பர் மாதம் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியது.

அமெரிக்க வேளாண்மைத் துறையின் (யுஎஸ்டிஏ) நிபுணர்கள் இது தொடர்பாக கடந்த 3 மாதங்களாக தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர். அதன்படி அங்கே தேனீக்கள் இரட்டை அளவு பலம் கொண்ட விஷம் காரணமாக மரணம் அடைந்துள்ளன.

அதாவது 30 லட்சம் தேனீக்கள் ஒரே நாளில் இரட்டை ஆபத்து கொண்ட விஷம் காரணமாக பலியாகி உள்ளன. ஏஜென்சியின் கண்டுபிடிப்புகளின்படி, விவசாயத்தில் தடைசெய்யப்பட்ட ஃபிப்ரோனில் என்ற விஷம் மூலம் இந்த தேனீக்கள் பலியாகி உள்ளன. ஃபிப்ரோனில் என்பது தடைசெய்யப்பட்ட கரைப்பான் கொல்லி ஆகும்.

இது ஒரு பூச்சியின் மைய நரம்பு மண்டலத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. "இரட்டை ஆபத்தான" அளவு விஷம் கொண்டது ஆகும் இது.

தேனீக்கள் அழிவு: பொதுவாக தேனீக்கள் அழிந்தது என்றால் அது உலக அழிவின் அறிகுறி ஆகும். அதன் காரணமாகவே இந்த தேனீக்கள் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அதிக அளவிலான தேனீக்கள் எவ்வாறு அந்த விஷ மருந்தை பெற்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

விவசாயத்தில் தடைசெய்யப்பட்ட ஃபிப்ரோனில் அவ்வளவு எளிதில்கிடைக்காது. அதை மீறி விவசாயத்தில் தடைசெய்யப்பட்ட ஃபிப்ரோனில் எப்படி அந்த தேனீக்களுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை.

விஷ பயன்பாட்டு அறிக்கைகளை வழங்கிய அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அப்பகுதியில் இருந்த பூச்சி கட்டுப்பாடு வணிகங்களை நாங்கள் நிறைய ஆய்வு செய்தோம். அவர்களில் யாரும் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தவில்லை. வேளாண்மை செயல்பாடுகளையும் பார்த்தோம். ஆனால் அங்கே எங்கேயும் பூச்சி மருந்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பழிக்கும் கணிப்பு: ஏற்கனவே பல உயிரினங்கள் பலியாகும், பறவைகள், விலங்குகள் பலியாகும், 2024ல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம். அதன்படியே இப்போது தேனீக்கள் பலியாகி உள்ளன.

2024ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும். இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியது என்று தெரிவித்துள்ளார் . அதாவது புடின் மரணம் பற்றி கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத "பெரிய நாடு" உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும் . அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும். விலங்குகள், பறவைகள், கடல் உயிரினங்கள் அதிகம் பலியாகும் என்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+