சொத்துக்கள் எல்லாம் யாருக்கு.. உயில் எழுதி வைத்துவிடடேன்.. நித்யானந்தா பரபரப்பு பேச்சு
Recommended Video
நியூயார்க்: தன்னுடைய ஆசிரமத்துக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து தான் உயில் எழுதி வைத்திருப்பதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா மீது இந்தியாவில் பாலியல் புகார்கள், கடத்தல் வழக்குகள், நிலுவையில் உள்ளன. அவரை பிடிக்க இந்திய போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் அமெரிக்கா அருகே ஒரு தீவில் இருப்பதாக கூறப்படுகிறது

அவரை பற்றி நாள்தோறும் பல குற்றச்சாட்டுகள் வரும் நிலையில், நித்யானந்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது சத்சங்கங்களை யூடியூப்பில் தினமும் பதிவேற்றி வருகிறார்.
நித்யானந்தா மீது நில மோசடி, பண மோசடி புகார்களை அவரது பக்தர்கள் எழுப்பி வரும் நிலையில் அவரது ஆசிரமத்திற்கு வந்த சொத்துக்கள் எல்லாம் தானாக வந்ததா அல்லது மக்களை வசியப்படுத்தி எழுதி வாங்கினாரா என்ற கேள்விகள் எழுகிறது. மனரீதியாக பக்தர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நித்யானந்தா வேண்டிய சொத்துக்களை எழுதி வாங்கியதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நித்யானந்தா தனது ஆசிரமத்துக்கான சொத்துக்கள் அனைத்தும் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications