பல கோடி பேருக்கு ஷாக்! டிரம்ப்பிற்கு இந்தியர்கள் மேல் என்ன கோபம்? கங்கணம் கட்டிக்கொண்டு ஷாக் முடிவு
சென்னை: அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன.
இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது தாங்கள் சேர்ந்துள்ள கல்வி திட்டங்களை விட்டு வெளியேறுவது குறித்து கடுமையான எச்சரிக்கைகளை அமெரிக்கா விடுத்துள்ளது. இது போன்ற தவறுகளை செய்தால் மாணவர்கள் தங்கள் விசாக்களை இழக்க நேரிடும் அல்லது எதிர்காலத்தில் எந்த அமெரிக்க விசாவிற்கும் விண்ணப்பிக்க முடியாமல் போகலாம் என்று கூறி உள்ளது.
நீங்கள் சேர்ந்துள்ள கல்வி திட்டத்தை, படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளைத் தவிர்த்தால் அல்லது உங்கள் படிப்புத் திட்டத்தை உங்கள் கல்வி நிறுவனத்திடம் முறையாக தெரிவிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும் எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கான தகுதியை நீங்கள் இழக்க நேரிடும். இது பிரச்சினையை தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, கல்லூரிக்கு தவறாமல் செல்லவும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் லிஸ்டை கணக்கெடுக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த திட்டத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து முடித்து முறைகேடாக over stay செய்கிறார்கள்.
2. அதாவது படிப்பிற்கான விசா முடித்து.. அதன் அவகாசம் முடிந்தும் பலர் முறைகேடாக over stay செய்கிறார்கள்.
3. சிலர் படிப்பு விசா வாங்கி பார்ட் டைம் வேலை பார்க்கிறார்கள்.
4. இதை இந்தியர்கள் பலர் பாக்கெட் மணி பெற வேண்டும் என்று செய்கிறார்கள்.
5. இவர்களை எல்லாம் டிரம்ப் வரும் காலத்தில் கணக்கெடுத்து ஆக்சன் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்கும் டிரம்ப்:
அமெரிக்காவில் அத்துமீறி தங்கி உள்ள இந்தியர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக என்றே சில எஸ்ஓபி பின்பற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா பின்பற்ற உள்ள எஸ்ஓபி: அதாவது பின்பற்ற பட உள்ள செயல்பாட்டு வழிமுறை:
1. அமெரிக்கா முதலில் அங்கே தங்கி உள்ள விசா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும்.
2. படிப்பிற்கு விசா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கு எடுக்கும்.
3. சுற்றுலா விசா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும்.
4. எச் 1 பி விசா காலாவதி ஆனவர்களை கணக்கு எடுக்கும்.
5. இனி இவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
6. அதன்பின் இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கும். ஒன்று இந்திய விமானத்தில் அவர்களை நாட்டிற்கு அழைத்து செல்வது
7. அல்லது அமெரிக்கா ராணுவ விமானத்தை உங்கள் நாட்டிற்குள் அனுமதியுங்கள் நாங்கள் வந்து விட்டுவிடுகிறோம் என்று கூறுவது.
8. இரண்டையும் இந்தியா ஏற்காத பட்சத்தில் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது. இதுவே டொனால்ட் டிரம்பின் திட்டம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications