கைமாறும் நிறுவனம்?.. டிக்டாக் செயலியில் நினைத்து பார்க்க முடியாத டிவிஸ்ட்.. பின்னணியில் அமெரிக்கா!
நியூயார்க்: டிக்டாக் நிறுவனம் மொத்தமாக அதன் நிறுவனர் ஷாங் யிமிங் கையை விட்டு போகும் நிலையை எட்டி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் முக்கியமான போர்ட் உறுப்பினர்களே தற்போது டிக்டாக் நிறுவனத்திற்கு எதிராக களமிறங்கி இருக்கிறார்கள்.
Recommended Video
கடந்த சில வாரங்கள் முன் இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டது. சீனாவுடன் நிலவிய மோதல் காரணமாக இந்தியாவில் மொத்தமாக டிக்டாக் உட்பட 59 செயலிகள் தடை செய்யப்பட்டது. இதனால் டிக்டாக் செயலிக்கு பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை கொண்டு வர அந்த நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஏன் இப்படி
டிக்டாக் பயனாளர்களின் தகவல்களை திருடுகிறது. அதை சீனாவின் அரசுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது. மக்களின் ரகசிய விவரங்கள், தகவல்கள் திருடப்படுகிறது என்று கூறப்பட்டது. தகவல் திருட்டு உலகின் பெரிய பிரச்சனையாகும். இதனால் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டது.

அமெரிக்கா எப்படி
இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது. இதற்கு மூன்று விதமான காரணங்கள் சொல்லப்பட்டது.
1. தகவல் திருட்டு
2.அமெரிக்க மக்களின் தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்தது.
3. அமெரிக்க அதிபருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை திட்டமிட்டு நடத்தியது என்று புகார் வைக்கப்பட்டது,

தடைக்கு பிளான்
இதனால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக விரைவில் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள். அந்நாட்டு அதிபர் டிரம்ப் இந்த செயலியை தடை செய்ய தீவிரம் காட்டி வருகிறார். சீனா மீது இருக்கும் கோபத்தை டிக்டாக் மீது காட்ட அவர் திட்டமிட்டு வருகிறார்.

விற்க சொன்னார்கள்
இதற்கு தீர்வாக டிக்டாக் நிறுவனர் ஷாங் யிமிங்கின் பங்குகளை அவர் விற்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்தமாக உங்கள் பங்குகளை 90% விற்றுவிடுங்கள். அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்றுவிடுங்கள். அமெரிக்கர் இதை நடத்தட்டும். அமெரிக்காவிற்கு இந்த நிறுவன தலைமையகத்தை மாற்றுவோம்.

அமெரிக்க நிறுவனம் போல
அப்படி அமெரிக்காவிற்கு நிறுவனத்தை மாற்றினால்தான் உலக நாடுகள் நம்மை நம்பும். அமெரிக்க நிறுவனம் போல இதை மாற்ற வேண்டும். சீனாவில் இருந்து மொத்தமாக டிக்டாக் நிறுவனத்தை நாம் வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஷாங் யிமிங் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார். அந்த நிறுவனமே தற்போது கைமாறும் நிலைக்கு சென்றுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்தார்
ஆனால் இதற்கு அந்த செயலியின் நிறுவனர் ஷாங் யிமிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்னால் பங்குகளை விற்க முடியாது. மைனாரிட்டி ஷேர் ஹோல்டர் போல மாறினால் நிறுவனம் கையைவிட்டு போகும். வேறு யாராவது என்னுடைய நிறுவனத்தை மொத்தமாக கையகப்படுத்திவிடுவார்கள். நான் இதை எதிர்கொண்டு, மீண்டும் டிக்டாக் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வர போகிறேன், என்று ஷாங் யிமிங் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications