நாடு விட்டு நாடு போய்.. வெனிசுலா அதிபரை சிறைபிடித்த டிரம்ப்! அவசரமாக கூடும் ஐநா பாதுகாப்பு கவுன்சில்
நியூயார்க்: அமெரிக்கா வெனிசுலாவில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பாதுகாப்பு கழகத்திலுள்ள ஒரு தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் கூட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்தது கொலம்பியா நாடாகும். 2026ஆம் ஆண்டின் முதல் நாளிலிருந்து, இரண்டு ஆண்டு காலத்திற்கு ஐநா பாதுகாப்பு கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ள கொலம்பியா, இந்த விவகாரத்தில் உடனடி ஆலோசனை அவசியம் என தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சீனாவும் ரஷ்யாவும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டலாம் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தெரெஸ் கலந்து கொண்டு நிலைமையை விளக்க வேண்டும் எனவும் கொலம்பியா குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வெனிசுலா பிரச்சினை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை. ஆனால் சமீபத்தில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள், கரீபியன் கடலில் நடந்த தாக்குதல்கள் போன்ற காரணங்களால் மீண்டும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த நடவடிக்கையை பாராட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், டிரம்பின் இந்த நடவடிக்கை "வரலாற்று சிறப்புமிக்கதும் துணிச்சலானதும்" என்று தெரிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் நீதி நோக்கி எடுத்த இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க இராணுவத்தினரின் வீரத்தையும் அவர் புகழ்ந்துள்ளார்.
இதே நேரத்தில், நியூயோர்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி வேறு கருத்தை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்ததாக டிரம்ப் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, நேரடியாகவே அவர் அதிபர் டிரம்பை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்ததாக கூறியுள்ளார்.
ஆட்சிமாற்றத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும், சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக நடப்பதற்கும் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அரசின் இந்த நடவடிக்கை, நியூயார்க் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கக் கூடாது என்பதே தனது முக்கிய கவலை என்று தெரிவித்தார். வெனிசுலா பிரச்சினை மீண்டும் சர்வதேச அரசியலில் தீவிரமாக பேசப்படும் நிலையில் உள்ள நிலையில், நடக்கவிருக்கு ஐநா பாதுகாப்பு கழக அவசரக் கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்படும் என்பது தற்போது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications