உக்ரைன் மீதெல்லாம் அக்கறையே இல்லை.. இந்தியாவை டிரம்ப் எதிர்க்க காரணமே வேறு.. பக்கா சுயநலம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போருக்கு இடையே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியா ரஷ்யாவிற்கு ஆதரவளிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், பல நிபுணர்கள், டிரம்பின் இந்த விமர்சனங்கள் போரைப் பற்றியது அல்ல, மாறாக அமெரிக்காவின் வர்த்தக நலன்களைப் பற்றியது என்று கருதுகின்றனர்.

டிரம்பின் சிறப்புத் தூதராகப் பரிந்துரைக்கப்பட்ட செர்ஜியோ கோர் சமீபத்தில் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ரஷ்ய கச்சா எண்ணெயைச் சார்ந்து இருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா இந்தியாவிற்கு அதிக எரிசக்தியை விற்க விரும்புவதே இதற்குக் காரணம்.

Donald Trump India

அமெரிக்கா பிஸ்னஸ்

அமெரிக்காவிற்கு போர் எல்லாம் முக்கியம் இல்லை. அமெரிக்காவிற்கு பிஸ்னஸ்தான் முக்கியம். டிரம்ப் ஒரு பிஸ்னஸ் மேன் என்பதை நிரூபிக்கும் விதமாக இதை செய்கிறார். இந்தியாவில் இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் உள்ளது. எதிர்காலத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிக பெட்ரோல், டீசல் தேவைப்படும் என்பதால், இது அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சந்தையாகவும், வாய்ப்பாகவும் உள்ளது, என்று அவர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. வாஷிங்டன், அமெரிக்கப் பொருட்களுக்கான சந்தைகளை இந்தியா திறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், அமெரிக்க விவசாய மற்றும் பால்பொருட்களுக்கு அனுமதி வழங்குவது போன்ற சில விஷயங்களில் இந்தியா பின்வாங்க மறுத்துவிட்டது.

டிரம்பின் இந்தியாவை நோக்கிய விமர்சனங்கள் உக்ரைனை விட, எரிசக்தி வர்த்தகம் பற்றியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய நடுத்தர வர்க்கம் அமெரிக்க கச்சா எண்ணெயின் வாடிக்கையாளர்களாக மாற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகவும், ரஷ்யா விவகாரத்தை ஒரு அழுத்தக் கருவியாகப் பயன்படுத்துவதாகவும் அவர்கள் விளக்கினர். அதாவது உக்ரைன் போர் என்று டிரம்ப் சொல்வது எல்லாம் வெறும் பூச்சாண்டிதான்..டிரம்ப் அமெரிக்க கச்சா எண்ணெயை இந்தியாவிடம் விற்க வேண்டும் என்று நினைக்கிறார். வேறு மனிதாபிமான காரணம் எதுவும் இல்லை என்று இந்திய நடுத்தர வர்க்கம் அமெரிக்க கச்சா எண்ணெயின்

இந்தியா டிரம்ப் வர்த்தக போர்

ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+