அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம் நலமுடன் இருப்பதாகவும் ஒபாமா தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2109-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களுடன் உலக நாடுகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் தடுக்கவும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொண்டன. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை மொத்தம்
60,66,173 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,85,74,939 ஆகும்.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சில நாட்களாக தொண்டையில் வலி இருந்தது. தற்போது நலமாக இருக்கிறேன். நானும் என் மனைவியுமான மிச்செலும் ஏற்கனவே கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டோம். மிச்செலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒபாமா விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடியும் அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications