ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் நோயாளிகள் இறப்பது அதிகரிப்பு.. அமெரிக்காவில் அதிர்ச்சி
நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 8லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 1500 முதல் 3000 பேர் வரை உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனாவை தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து நன்றாக வேலை செய்வதாக அறிவித்த டிரம்ப் அந்த மருந்தை இந்தியாவிடம் இருந்து வாங்கி குவித்தார். அமெரிக்கா வாங்கியதால் இந்த மருந்தை 55க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளுக்கும் வாங்கி குவித்தன. இதனால் திடீரென ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஆய்வு
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் மருந்துகளை உட்கொண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 368 பேரை ஆய்வு செய்தனர்.

செயற்கை சுவாசம்
இந்த ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் அல்லது செயற்கை சுவாச கருவி பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுவான சிகிச்சை முறையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தையோ, அல்லது அந்த மருந்துடன் அஸித்ரோமைசின் மருந்தையோ சேர்த்து சாப்பிடாத நோயாளிகளுக்கு மரண அபாயமோ வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய அபாயமோ குறைவாகவே உள்ளது என்று ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்களுக்கு இல்லை
ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்கும் அபாயமும் அதிகமாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது ஆனால் இந்த ஆய்வு என்பது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குத்தான் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு பெண்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்க விளைவு உண்டு
எனினும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் தான் கொரோனா நோய் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எப்படி பயன்படுகிறது என்பது தெரியவரும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போதைய நிலையில் ஏற்கனவே உடல் நிலை பாதித்தவர்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் உலகம் முழுவதும் மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications