ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் நோயாளிகள் இறப்பது அதிகரிப்பு.. அமெரிக்காவில் அதிர்ச்சி
நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 8லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 1500 முதல் 3000 பேர் வரை உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனாவை தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து நன்றாக வேலை செய்வதாக அறிவித்த டிரம்ப் அந்த மருந்தை இந்தியாவிடம் இருந்து வாங்கி குவித்தார். அமெரிக்கா வாங்கியதால் இந்த மருந்தை 55க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளுக்கும் வாங்கி குவித்தன. இதனால் திடீரென ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஆய்வு
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் மருந்துகளை உட்கொண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 368 பேரை ஆய்வு செய்தனர்.

செயற்கை சுவாசம்
இந்த ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் அல்லது செயற்கை சுவாச கருவி பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுவான சிகிச்சை முறையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தையோ, அல்லது அந்த மருந்துடன் அஸித்ரோமைசின் மருந்தையோ சேர்த்து சாப்பிடாத நோயாளிகளுக்கு மரண அபாயமோ வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய அபாயமோ குறைவாகவே உள்ளது என்று ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்களுக்கு இல்லை
ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்கும் அபாயமும் அதிகமாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது ஆனால் இந்த ஆய்வு என்பது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குத்தான் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு பெண்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்க விளைவு உண்டு
எனினும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் தான் கொரோனா நோய் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எப்படி பயன்படுகிறது என்பது தெரியவரும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போதைய நிலையில் ஏற்கனவே உடல் நிலை பாதித்தவர்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் உலகம் முழுவதும் மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications