நாய்க்கு ரூ.36 கோடி மதிப்பில் சொத்து எழுதி வைத்த மூதாட்டி! இப்படியும் ஒரு காரணம்!
நியூயார்க்: சொந்த பந்தம் யாருமில்லாததால் தான் பாசமாக வளர்த்த 8வயது நாய் லுலுவுக்கு 36 கோடி மதிப்புள்ள சொத்துககளை எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார் மூதாட்டி. மூதாட்டி இறந்துவிட்டதால் நாயை ஒரு அறக்கடளை கவனித்து வருகிறது.
அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தின் தலைநகர் நஷ்வில்லேவில் வசித்தவர் பில் டோரிஸ் (வயது 840. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் சொந்த பந்தங்கள் அவருடன் இல்லை. மிகவும் வெற்றிகரமான தொழில் அதிபராக இருந்த பில் டோரிஸ்க்கு சொந்த பந்தங்கள் இல்லை என்ற கவலை இருந்துள்ளது.
திருமணம் ஆகாத காரணத்தால் தன்னை வயதான காலத்தில் உடன் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத நிலையில் பில் டோரிஸ் தவித்துள்ளார். அவர் லுலு என்ற நாயை பாசமாக வளர்த்து வந்துள்ளார். அந்த நாயுடன் ஆண்டுகுளை கழித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் தனக்கு யாரும் இல்லை என்ற விரக்தியில் தனது சொத்துக்களை நாயின் பெயரில் எழுதி வைத்தார்.
தான் பாசமாக வளர்த்த 8வயது நாய் லுலுவுக்கு 36 கோடி மதிப்புள்ள சொத்துககளை எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார் மூதாட்டி பில் டோரிஸ். அந்த நாய் லுலுவை அறக்கட்டளையின் பராமரிப்பாளரான மார்த்தா பர்டன் பராமரித்து வருகிறார்.
லுலுவின் கவனிப்புக்காக பராமரிப்பாக பணத்தை எடுத்து செலவு செய்ய அறக்கடளையை அனுமதிக்கிறது பில்டோரிஸ்சின் உயில். இப்படியும் சில விந்தையான மனிதர்கள் இருககிறார்கள் என்பது நாய்க்கு 36 கோடி சொத்தை எழுதி வைத்த மூதாட்டி சிறந்த உதாரணம்.