பாராசிட்டமாலால் ஆட்டிசம் நோய் வரும்? "டாக்டர்" டிரம்ப் சொன்னதுமே, உடனே மறுத்த உலக சுகாதார நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இத்தனை நாளும் எச்1பி விசா கொள்கையை மாற்றியமைத்து, இந்தியாவை திகைக்க செய்து வந்த அமெரிக்க டிரம்ப், திடீரென டாக்டர் போல பேச ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.. ஆனால், டிரம்பின் கூற்றை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.. டிரம்ப் இப்படி சொல்வது மருத்துவ ரீதியாக எந்த தொடர்பும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜெனீவாம்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது.

paracetamol pills donald trump

டாக்டர் டிரம்ப் தந்த விளக்கம்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, "அதிகமாக Tylenol எடுக்காதீர்கள். (அமெரிக்காவில் பாராசிட்டமல் மாத்திரைக்கு வழங்கப்படும் ஒரு பிராண்ட் பெயர்தான் டைலெனால்) இதனை எவ்வளவு முடியுமோ தவிர்த்து விடுங்கள்.. மிகுந்த அவசரம் என்றால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்...

தடுப்பூசி ஒன்றாக கொடுக்கப்படாமல், தனித்தனியாக கொடுக்கப்பட வேண்டும். ஒன்றாகக் கலந்து கொடுத்தால் பிரச்சனை உண்டாகிவிடும் என்று தெரிகிறது. பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆட்டிசம் பிரச்சனை ஏற்படுகிறது..

குறிப்பாக, கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

பாரசிட்டமால் சாப்பிட்டால் ஆட்டிசம் வருமா

இதைக்கேட்டதுமே மருத்துவ துறையில் லேசான அதிர்வலைகள் எழும்பின.. பாராசிட்டமால் அல்லது அசிட்டாமினோபென் என்று அழைக்கப்படும் மாத்திரையை உலகம் முழுவதும் பலரும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள்.. மேலும் இது ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.. அத்துடன் காய்ச்சலையும் குறைக்கக்கூடியது.

இப்படிப்பட்ட சூழலில் டிரம்ப் இப்படியொரு விஷயத்தை சொன்னதுமே பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. தற்போது டிரம்பின் கூற்றை உலக சுகாதார நிறுவனம் முற்றிலும் நிராகரித்துள்ளது.

பாராசிட்டமால் மாத்திரை பாதுகாப்பானது

இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை.. கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான சில மருந்துகளில் பாராசிட்டமால் முக்கியமானது. காய்ச்சல் மற்றும் வலி குறைக்க இது அவசியம்.

கர்ப்பிணி பெண்களில் சுமார் 50% பேர் பாராசிட்டமால் பயன்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பல நாடுகளில் இது பல பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.. காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் மலரும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். அதனால், டாக்டர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான தேர்வாகவே கருதுகின்றனர்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லை. ஆட்டிசத்துக்கும், இதற்கும் தொடர்பு என்று சொல்வது பொருத்தமில்லாதது.. பாராசிட்டமாலை பாதுகாப்பான டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்.. அதனால் மக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று விளக்கம் தந்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது... இதையடுத்து, டிரம்பின் கருத்துக்கு எதிரான கமெண்ட்கள் சோஷியல்மீடியாவில் சர்வதேச அளவில் பதிவாகி வருகின்றன.. பாராசிட்டமாலுக்கும், ஆட்டிசத்துக்கும் என்ன தொடர்பு? ஒரு நாட்டின் அதிபர் இப்படியா ஆதாரமின்றி பொறுப்பில்லாமல் பேசுவது? என்று இணையவாசிகள் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+