பழங்களால் ஆன பட்டாம்பூச்சி.. பரவசப்படுத்தி பழ கோபுரம்.. குன்னூரில் களை கட்டிய கண்காட்சி!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று 61-வது பழக்கண்காட்சி துவங்கி உள்ளது.
குன்னூர்: பழங்களால் ஆன பட்டாம்பூச்சி.. அழகான பழ கோபுரம்.. இப்படியாக களை கட்டியுள்ளது குன்னூர் பழக் கண்காட்சி.
வருடா வருடம் நடைபெறும் விழா இது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் மலர்க் கண்காட்சி, பழக் கண்காட்சி ஆகியவை ஊட்டி மற்றும் குன்னூரில் நடத்தப்படும்.

அந்த வகையில், குன்னூரில் உள்ள புகழ் பெற்ற சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கு இது நடைபெறும்.
இது 61வது பழக் கண்காட்சி ஆகும். தமிழக அரசின் தோட்டக் கலைத்துறை சார்பில் இது நடத்தப்படுகிறது. கண்காட்சியையொட்டி பழங்களால் ஆன விதம் விதமான அமைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

சிம்ஸ் பூங்காவின் நுழைவு வாயிலில் 12அடி உயரத்தில் பலாப்பழம் உட்பட பல்வேறு பழங்களால் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது காண்போர் அனைவரையும் இனிப்புடன் வரவேற்பது போல் அமைந்துள்ளது.
மேலும் இந்த வருடம் சிறப்பம்சமாக ஆரஞ்சு,சாத்துக்குடி, பைனாப்பிள், பிளம்ஸ், டார்ஜன் போன்ற பல்வேறு பழங்களை கொண்டு பழகோபுரம், மயில் மற்றும் பட்டாம் பூச்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை சார்பாக 10 க்கும் மேற்பட்ட அரங்குகள் மறும் தனியார் அரங்குகளில் முள்சீதா பழம், துரியன் பழம், வெல்வெட் ஆப்பிள், முட்டை பழம், பம்ளிமாஸ் பழம், ரோஸ் ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த 17ம் தேதி ஊட்டியில் மலர்க் கண்காட்சி தொடங்கி 22ம் தேதி வரை நடந்தது. அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பார்வையிட்டுச் சென்றனர். இந்த நிலையில் தற்போது 2 நாள் பழக் கண்காட்சி தொடங்கியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications