நீலகிரியில் பாறைக்கு மேலே.. என்ன அது? ஒரே ஷாக்.. இப்படி ஒரு போட்டோவை பார்த்து இருக்கவே மாட்டீங்க!
நீலகிரி: நீலகிரி காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
சிங்கங்கள், சிறுத்தைகள் , புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் உள்ளன. 7,910 சிறுத்தைகள் உள்ளன.

இந்தியாவில் பல்வேறு வகையான புலி, சிறுத்தை இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் வனப்பகுதிகளில் புலிகள் உள்ளன. இந்த நிலையில் நீலகிரி காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
அதன்படி நீலகிரி காட்டுக்குள் நேற்று இரண்டு சிறுத்தைகள் ஒன்றாக அருகருகே இருந்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு சிறுத்தை எப்போதும் பார்க்கப்படும் சாதாரண உருவம் கொண்டது. இன்னொரு கரும் சிறுத்தை ஆகும். இதில் கரும் சிறுத்தை ஆண் சிறுத்தை ஆகும். சிவப்பு சிறுத்தை பெண் சிறுத்தை ஆகும். இவை ஜோடி சிறுத்தை என்று வனவிலங்கு வல்லுனர்கள் கூறி உள்ளனர்.காட்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசா: இதேபோல்தான் ஒடிசா காட்டு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்திய புலி வகைகளில் ஒன்றாக ஒடிசாவில் இருக்கும் சிமிலிபால் புலி வகைகள் முக்கியமானது ஆகும். இந்த புலிகள் சாதராண இளம் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்து இருந்து கருப்பு நிறமாக சமீப நாட்களாக மாறி வருகிறது.
அந்த வீடியோவில் கருப்பு நிறத்தில் வினோதமாக விலங்கு ஒன்று மரத்தின் மீது சாய்ந்து இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. பார்த்ததும் முதலில் கரடி போல இருக்கும் இந்த விலங்கை பார்த்து பலர் குழம்பும் அளவிற்கு வித்தியாசமாக அந்த விலங்கு உள்ளது. பார்க்கவே பயங்கரமாக, உறைய வைக்கும் அளவிற்கு இந்த விலங்கு காட்சி அளிக்கிறது. இதன் உடல் முழுக்க கோடுகளும் உள்ளன.
Mating pair of leopards 🐆🐆 Nilgiri Biosphere Reserve.
— Kishore Chandran🇮🇳 (@tweetKishorec) July 4, 2023
Pc - Pantheratigris pic.twitter.com/XmJCrgyeY2
புலி: உண்மையில் இது ஒரு புலி ஆகும். வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இது சிமிலிபால் காட்டுப்பகுதியில் ஒடிசாவில் காணப்படும் கருப்பு நிற புலி ஆகும். இதன் உடல் முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும். கோடுகள் மட்டும் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். சில கொடுக்கல் தங்க நிறத்திலும் காணப்படும். இது மிக மிக அரிதான வகையை சேர்ந்த புலிகள் ஆகும். இதன் செல்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த நிற மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
புலிகள் எண்ணிக்கை: ஆம்.. 2017, 2018 மற்றும் 2019ல் இருந்து ஒடிசாவில் பல புலிகளின் உடல்களில் இந்த நிற மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த 50 முதல் 60 வருடங்களுக்கு முன்பே ஒடிசாவில் சிமிலிபால் பகுதியை சேந்த பழங்குடி மக்கள் புலிகள் நிறம் மாறுவதாக குறிப்பிட்டு வந்துள்ளார். ஆனால் அதை முதலில் புலிகளை ஆராய்ச்சி செய்யும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் நம்பவில்லை. ஆனால் இப்போது அவர்களின் கண்காணிப்பில் இருக்கும் புலிகளே நிறம் மாற தொடங்கி உள்ளன.
Tigers are symbol of sustainability of India’s forests…
— Susanta Nanda (@susantananda3) July 29, 2022
Sharing an interesting clip of a rare melanistic tiger marking its territory on international Tigers day.
From a Tiger Reserve poised for recovery of an isolated source population with a very unique gene pool. Kudos🙏🙏 pic.twitter.com/FiCIuO8Qj4
ஏன் இப்படி?: இதனால் அந்த புலிகள் மிகவும் வினோதமாக காட்சி அளிக்கின்றன. புலிகளின் உடலில் ஏற்பட்ட ஜீன் மாற்றம்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகளின் உடலில் டிரான்ஸ்மெம்பரீன் அமினோபெப்டிடாஸ் க்யூ அல்லது டாக்பெப் ஆகியவற்றில் ஏற்பட்ட ஜீன் உருமாற்றம் காரணமாக இந்த வரிகள் மாற்றம் ஏற்பட்டு, அது புலிகளுக்கு புதிய நிறத்தை கொடுத்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புலிகளின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications