கட்டிலுக்கு கீழே எட்டிப் பார்த்தா ... சிறுத்தை... மலங்க மலங்க விழித்தபடி.. கூடலூரில் பரபர
கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்த சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்
Recommended Video

கூடலூர்: யானையை பிடித்தார்களோ இல்லையோ, வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் 6 மணி நேரத்தில் பக்காவாக பிளான் போட்டு பிடித்துவிட்டார்கள்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கைவட்டா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ராயன். இவர் ஒரு விவசாயி. வீட்டிலேயே தோட்டம் இருக்கிறது. நேற்று மதியம் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்குள் நுழைந்தார்.
அப்போது வீட்டிற்குள் வித்தியாசமான சத்தம் ஒன்று வந்து கொண்டே இருந்தது. வீட்டிற்குள் சுற்றுமுற்றும் பார்த்தும் ஒன்றும் கண்ணில் படவில்லை. ஆனாலும் சத்தம் வந்து கொண்டே இருக்கவும், கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தார். அப்போது, ஒரு சிறுத்தை படுத்துக் கொண்டும் உறுமிக் கொண்டும் இருந்தது.

கட்டிலுக்கு அடியில் சிறுத்தை
வீட்டில் யாருமில்லாத போது வீட்டிற்குள் நுழைந்து கட்டிலுக்கு அடியில் படுத்து கொண்டிருப்பது பிறகு தான் தெரியவந்தது. இத்தனைக்கும் அந்த வீட்டிற்குள் ஆட்கள் இருந்திருக்கிறார்கள். யாருமே சிறுத்தை வந்ததை கவனிக்கவே இல்லை.

கூச்சலிட்டனர்
சிறுத்தையை பார்த்து பயந்து வீட்டை விட்டு எல்லோரும் வெளியே ஓடி வந்தனர். ஒரு பூட்டை எடுத்து வெளிப்பக்கமாக கதவை பூட்டிவிட்டு தெருவில் வந்து நின்று கூச்சலிட்டனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

2 வயது சிறுத்தை
விரைந்து வனத்துறையினரும் வீட்டில் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். அந்த சிறுத்தைக்கு 2 அல்லது 3 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

லாவகமாக பிடித்தனர்
சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிப்பதா, அல்லது வலை மூலம் பிடிப்பதா என்பது குறித்து கால்நடை மருத்துவர் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்கப்பட்டது. கடைசியாக கூண்டு வைத்து பிடிப்பது என முடிவு செய்து, கட்டிலுக்கு கீழே உள்ள சிறுத்தையை வனத்துறையினர் லாவகமாக பிடித்து கொண்டுபோய் காட்டில் விட்டார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications