காதல் வளர்த்தேன்.. காதலிக்காக கஞ்சா வித்தேன்! பிப்ரவரி 14 வருதுல்ல.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
நீலகிரி: நீலகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தான் காதலித்து வரும் பெண்ணுக்கு செலவு செய்வதற்காகவும், அவருடன் வெளியே சுற்றுவதற்காகவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறியதோடு, கஞ்சா விற்பனையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாக கூறி காவல் துறையினரை அதிர வைத்துள்ளார்.
காதலர் தினம் வந்து விட்டது. காதலிகள் காதலர்களையும், காதலர்கள் காதலிகளையும் எப்படி கவர்வது என்று டிசைன் டிசைனாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க காதலிக்காக கஞ்சா விற்று சிக்கி இருக்கிறார் இளைஞர் ஒருவர்.

மேலும் அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள் போலீசார். நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை இணைக்கும் பகுதியாக இருக்கிறது. அங்குள்ள ஊட்டி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே அங்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்காகவும் வருகிறார்கள். தொடர்ந்து மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்படி வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது தான் 21 வயது கல்லூரி மாணவர் சிக்கினார்.
கஞ்சா பொட்டலங்களை பாக்கெட்டிலும் தனது பைக்கிலும் வைத்திருந்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார், 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்த போது சொன்ன தகவல் தான் போலீசாரை தலை சுற்ற வைத்திருக்கிறது. ஊட்டியை சேர்ந்த அந்த கல்லூரி மாணவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு மது , புகை போன்ற பழக்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இளம்பெண் ஒருவரையும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனது விலை உயர்ந்த பைக்கில் அந்த பெண்ணுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். அவர்கள் பெற்றோர் கொடுக்கும் பணம் அதற்கு போதுமானதாக இல்லை. அவருக்கு போதிய வருமானமும் இல்லை, அந்த பெண்ணுடன் ஊர் சுற்றாமல் இருக்க முடியவில்லை. என்ன செய்வது என யோசித்தபோதுதான் அவருடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்களுடன் கரம் கோர்த்து அவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை 20 ஆயிரத்திற்கு வாங்கி சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்திருக்கிறார். இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்திருக்கிறது. அந்த பணத்தில் தனது காதலிக்கு புத்தாடைகள் செல்போன் மற்றும் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது என எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதால் காவல் நிலைய ஜாமினிலேயே விடுவித்துள்ளனர். காதலுக்காக என்னென்னவோ செய்கிறார்கள்.. கஞ்சா விற்பனையுமா செய்வார்கள் என புலம்புகின்றனர் மக்கள்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications