ஷாக்கிங்.. குன்னூரில் ஹாஸ்டல் மாணவிகள் 21 பேருக்கு கொரோனா.. பள்ளி இழுத்து மூடல்..!
ஊட்டி: குன்னுாரில், 21 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது... இதையடுத்து, அப்பள்ளி மூடப்பட்டது..
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று உயர்ந்திருந்த கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது.. எனினும், நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 17 பேர், சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.. இப்போதைக்கு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை
மற்றொருபக்கம் தடுப்பூசியை செலுத்தும் பணிகளும் மும்முரமாகி வருகின்றன.. கடந்த 2 மாதங்களாகவே தொற்று கட்டுக்குள் வந்த நிலையில்தான், நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டு, 9 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு, குன்னூர் பெட்போர்டு அருகே உள்ள ஆங்கில வழி மேல்நிலை பள்ளியில், 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சிகிச்சை
அதில், பிற மாணவர்களுக்கு, பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டது.. அதை தொடர்ந்து, 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதியானது. இதனால் அந்த பள்ளியை மூட வேண்டி நிலைமை வந்தது.. இதற்கு பிறகு தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவிகள் குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், அம்பேத்கர் நகர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 21 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது..

பாதிப்பு
குன்னூரில் தனியார் விடுதியில் இந்த பள்ளி மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர்... அந்த விடுதியில் 21 மாணவிகளுக்கும், ஒரு பணியாளருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது... அவர்கள் குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, ஹாஸ்டல் ஊழியர்கள், பள்ளியில் உடன் படிக்கும் மாணவிகள் என 100 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா டெஸ்ட்டுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது...

பரிசோதனை
அந்த ஹாஸ்டலுக்கும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.. இங்கு பணியாற்றும் நபர்களுக்கும் மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடத்தி, இவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரம் சேகரித்து, மாதிரி எடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்... இங்கு உள்ள 113 மாணவியருக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications