Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூடலூர் தோட்டத்து இந்திராணிக்கு சூப்பர் சர்ப்ரைஸ் தந்த முர்மு! நீலகிரி பெண்ணுக்கு தபாலில் வந்த பரிசு

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி கூடலூரில் இந்திராணியின் வாழ்வில் மறக்க முடியாத தருணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.. டெல்லியில் இருந்து வந்த அழைப்பை பார்த்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.. இந்த செய்திதான் நீலகிரி முழுக்க பரவி வியப்பை கூட்டி வருகிறது.. இந்திராணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்தபடி உள்ளன.

ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகிறார். பிரதமர் மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், நாட்டின் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் சாதாரண மக்களுக்கும் அழைப்பு வழங்கப்படுகிறது.

Nilgiris Gudalur Tea Estate Indirani

யாரிந்த இந்திராணி?

அந்த வகையில்தான் கூடலூரை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு கிடைத்த இந்த அழைப்பு, பலரையும் நெகிழ வைத்துள்ளது. இதனால் அனைவருமே இந்திராணிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்..

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட நந்தட்டி அருகேயுள்ள மில்லிகுன்னு கிராமத்தில் வசிப்பவர்தான் இந்திராணி... இவருக்கு வயது 56 வயதாகிறது..

கூலித் தொழிலாளியான இவரது கணவர் ராஜேந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்... 3 மகள்கள், ஒரு மகன் என நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் இந்திராணி. தனியார் தேயிலைத் தோட்டங்களில் தினக் கூலியாக பசுந்தேயிலை பறிப்பதே இவரது அன்றாட வேலையாகும்..

இப்போது, 77-வது குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுப்பிய அழைப்பு, தேயிலை பறித்துக் கொண்டிருந்த இந்திராணியிடம் நேரில் வந்து சேர்ந்தது...

தேயிலை தோட்டத்தில் இந்திராணி

கூடலூர் உட்கோட்ட தபால் நிலைய ஆய்வாளர் ராமஜெயனேலு தலைமையிலான அலுவலர்கள், முதலில் இந்திராணிக்கு வீட்டுக்கு இந்த கடிதத்துடன் சென்றுள்ளார்கள்.. ஆனால் இந்திராணி வீட்டில் இல்லாததால், தேயிலைத் தோட்டத்துக்கே சென்று முர்மு தந்த கடிதத்தை வழங்கினார்கள்..

கடிதத்தை வாங்கி, அதனைப் பிரித்து படித்த இந்திராணி, திடீரென வந்த அழைப்பால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். கடைக்கோடி கிராமத்தில் வாழும் தேயிலைத் தோட்ட கூலி தொழிலாளியான தனக்கு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பெரும் ஆச்சரியமாக இருப்பதாக கூறுகிறார் இந்திராணி.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்

இதுகுறித்து இந்திராணி மேலும் சொல்லும்போது, கூடலூர் சளிவயல் கிராமத்தில் நெல்லிகுண்ணு பகுதியில் வசித்து வருகிறேன்.. நான் ஒரு சாதாரண தேயிலை தோட்டத்து தினக்கூலி தொழிலாளி.. பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு வீடு கட்டி தந்திருந்தனர்.. அதுதொடர்பாக கடந்த மாதம் அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்திருந்தனர்..

நான் எந்த பெரிய சாதனையும் செய்யாத போதிலும், இப்படியொரு அழைப்பு கிடைத்திருப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது" என்று பூரித்து சொல்கிறார்..

தேயிலைத் தோட்டத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் இந்திராணியின் கதையை கேட்ட சக தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. அதைவிட தபால் துறையினர் நேரிலேயே வந்து அழைப்பு வழங்கியது, கூடலூர் பகுதியையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.. இந்திராணிக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அப்பகுதி மக்கள் பார்க்கிறார்கள்.

உழைப்புக்கு அரசு மரியாதை

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அனைவருக்குமே கிடைத்துவிடுவதில்லை,.. ஆனால், சாதாரண உழைப்பாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியும் என்பதும், உழைப்புக்கான மரியாதையை அரசு கொடுத்து வருகிறது என்பதும் இந்நிகழ்வு மூலம் நமக்கு தெரியவருகிறது..

இந்த டெல்லி பயணத்தில் ராஷ்டிரபதி பவனில் விருந்து, நாட்டின் தலைவர்களை நேரில் பார்க்கும் அனுபவம், இந்திராணியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக நிலைத்திருக்கும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+