ஹாஸ்டலில் சேர ரூ.10,000 லஞ்சம்.. பரவிய ஷாக் வீடியோ! உதகை அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!
நீலகிரி: உதகையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடம், பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சுமார் 4,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஏழை, எளிய மாணவர்கள், ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், உதகை அரசுக் கல்லூரியில் சேரவும், ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேரவும் மாணவர்களிடம், பேராசிரியர்களும், முதல்வரும் பணம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர் ஒருவரிடம், அரசுக் கல்லூரி முதல்வர் பணம் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்காக லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உதகை அரசு கலைக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க பட்டியலின மாணவர்களிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முதல்வர் அருள் ஆண்டனி, வேறு துறைக்கு மாறுவதற்கு மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற தாவரவியல் இணை பேராசிரியர் ரவி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications