ஊட்டி செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது இணையதள முகவரி.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல வரும் 7ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியான நிலையில் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் நாளை முதல் பொதுமக்கள் இ-பாஸ் பெறலாம். இ-பாஸ் பெற கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் கிடைக்கும்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு செல்வது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் ஊட்டி, கொடைக்கானல் சாலைகளில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான மக்கள் வருகையால் கொரோனா காலத்தை போல் இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோரக்க இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இ-பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தது.
இந்நிலையில் தான் ஊட்டி செல்ல இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவித்தார் நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். epass.tnega.org இணையதளம் வாயிலாக இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்யலாம் என நீலகிரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மே 7 ம் தேதி நாளை மறுநாள் வருகிறது. இருப்பினும் முன்கூட்டியே பொதுமக்கள் நாளை முதல் இந்த இணையதள முகவரி மூலம் இ-பாஸ் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று ஊட்டி இ-பாஸ் தொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதுபற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இ-பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவாக உள்ளது. மேலும் இ-பாஸ்க்கு என்று வழிக்காட்டுதல்களை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதன்படி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் என்பது டிஎன்இஜியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊட்டிக்கு சுற்றுலா, வணிகம், தொழில்முறை சார்ந்து வாகனங்களில் வருபவர்கள் இந்த இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய் வேண்டும்.
இப்படி விண்ணப்பம் செய்யும்போது ஆர்டர் ஜெனரேட் ஆகும். அதில் ஒரு க்யூஆர் கோட் இருக்கும். அந்த க்யூஆர் கோட்டை சோதனையில் இருக்கும் அதிகாரிகள் பரிசோதித்து வேலிடா? இல்லையா? என்பதை பார்த்து வாகனங்களை அனுமதிப்பார்கள். இந்த இ-பாஸ் நடைமுறை என்பது ரொம்ப ஈஸியானது. யாராவது வெளிநாடுகளில் இருந்து வந்தால் அவர்கள் இ-மெயில் விபரத்தையும், நம் நாட்டில் உள்ளவர்கள் செல்போன் எண் விபரத்தையும் பயன்படுத்தி தங்களின் சுயவிபரங்களை பதிவிட்டால் போதும். எங்கிருந்து வருகிறோம் என்பதையும், எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை ஊட்டியில் இருப்பார்கள், எந்த இடத்தில் தங்க உள்ளனர் என்பதை குறிப்பிட வேண்டும்.
மேலும் பயணிக்கும் வாகனம் காரா, பஸ்ஸா, வேனா என்பதையும், வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளனர்கள் என்பதையும் குறிப்பிட்டால் போதும் இ-பாஸ் ஜெனரேட் ஆகிவிடும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். இந்த இ-பாஸ் நடைமுறையில் எத்தனை பேர் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வாகனங்களுக்கான இ-பாஸ் பதிவு நடைமுறை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். மேலும் ஊட்டி வருபவர்கள் இ-பாஸை நீட்டிப்பு செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.
மாறாக பேருந்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. அதேபோல் நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வசிக்கலாம். அவர்கள் வேறு பதிவெண் கொண்ட வாகனங்களை ஊட்டியில் பயன்படுத்தலாம். இதுதொடர்பாக ஆர்டிஓவிடம் தகவல்கள் கேட்டுள்ளோம். அந்த தகவல் டேட்டா பேஸில் சேர்த்து என்டரி செய்ய உள்ளோம். இதனால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்படாது. வாடகை கார் ஓட்டுவோருக்க வணிக ரீதியிலான சீசன் பாஸ் என்பது ஒரு மாதத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இது ஒரு சோதனை முறையில் செயல்படுத்தப்படும் திட்டமாகமகும். கட்டுப்பாடுகள் இருந்தால் தான் திட்டத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது இ-பாஸ் பெறும் நடைமுறையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. '' என்றார்.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications