தொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்று திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்று திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
நாடு முழுக்க தற்போது பல மாநிலங்கள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மழை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதித்த பகுதி என்றால் அது நீலகிரிதான். நீலகிரியில் கடந்த 5 நாட்களாக விடமால் மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மிக கனமழை பெய்தது.
அதேபோல் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய இடங்களில் கடந்த நான்கு நாட்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 450 மிமீ மழை பெய்துள்ளது.
அதேபோல் இன்றும் 500 மிமீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக அங்கு பல நூறு மக்கள் வீடுகளை இழந்து இருக்கிறார்கள். அதேபோல் நீலகிரியில் இதனால் 15க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2528 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் அங்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் சென்று நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி சென்ற ஸ்டாலின் அங்கு திமுக உறுப்பினர்களுடன் சேர்ந்து மக்களை சந்தித்தார். மழையால் வீடுகளை இழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார். மழையில் சுவர் இடிந்து விழுந்து பலியான நீலவட்டம் பகுதியை சேர்ந்த அமுதா என்ற பெண்ணின் வீட்டிற்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார.
உயிரிழந்த அமுதாவின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின் உதவித்தொகையும் வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், தேவையான உதவிகளை திமுக உறுப்பினர்கள் மூலம் செய்வதாக உறுதியளித்தார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications