நீலகிரி அவலாஞ்சியில் 19 செ.மீ மழை பதிவு! வீடுகள் மண்ணில் புதைவதால் அச்சம்
நீலகிரி: நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அவலாஞ்சியில் 19 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதேபோல பசுவக்கல் பகுதியில் மண்ணில் வீடுகள் புதைவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். அதேபோல, உள் மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அவலாஞ்சி மற்றும் பர்சன் பள்ளத்தாக்கு பகுதியில் மழை தொடரும். கோவையை பொறுத்தவரை சின்னக்கல்லாறு பகுதியில் மழை நீடிக்கும். இன்று தமிழகத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 190 மி.மீ (19 செ.மீ) அளவுக்கும், குறைந்தபட்சமாக கோவையின் பெரியபோது பகுதியில் 65 மி.மீ அளவுக்கும் மழை பெய்திருக்கிறது.
அப்பர் பவானி - 125 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் - 77 மி.மீ
கூடலூர் - 66 மி.மீ
குந்தா - 66 மி.மீ
மேல் கூடலூர் - 66 மி.மீ
கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை
சின்னக்கல்லார் - 119 மி.மீ
பெரியகல்லாறு - 119 மி.மீ
மாக்கினாம்பட்டி - 113 மி.மீ
கீழ் நீரார் - 90 மி.மீ
சின்கோனா - 90 மி.மீ
சோலையார் அணை - 87 மி.மீ
பொள்ளாச்சி - 85 மி.மீ
வால்பாறை ஏஆர்ஜி - 84 மி.மீ
வால்பாறை பிஏபி - 76 மி.மீ
வால்பாறை தாலுகா அலுவலகம் - 70 மி.மீ
பெரியபோது - 65 மி.மீ
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பெரியாறு அணை பகுதியில் 112 மி.மீ., திருநெல்வேலி மாவட்டத்தில் நாலுமூக்கு பகுதியில் 72 மி.மீ., கொடுமுடியாறு 69 மி.மீ., ஊத்து 68., என மழை பதிவாகியிருக்கிறது. சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல நீலகிரி மாவட்டம் பசுவக்கல் பகுதியில் வீடுகள் மண்ணில் புதைவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்குள்ள பகுதியில் விளை நிலங்களை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் 5 வீடுகள் மண்ணில் புதைய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு வீட்டின் கால்வாசி பகுதி உடைந்து சரிந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications