Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேசன் கந்து வட்டி..நீலகிரியில் 14 பேரை தட்டி தூக்கிய போலீஸ்! பல லட்சம் பறிமுதல்!!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தையும் வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Recommended Video

    ஆபரேசன் கந்து வட்டி..நீலகிரியில் 14 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

    தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கந்துவட்டி வசூல் செய்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.25 கோடி பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    operation kanthuvatti: FIR against 14 people who gave kanthuvatti money in the Nilgiris

    இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும், கடந்த சில தினங்களாக கந்துவட்டி கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 42 இடங்களில் போலீசார் நடைபெற்ற அதிரடி சோதனையில், குன்னூர், கூடலூர், தேவாலா, கோத்தகிரி, உதகை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு கந்துவட்டிக் கொடுத்ததாக 7 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கந்துவட்டி கொடுக்கும் நபர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராபர்ட் தலைமையில் காவல்துறையினர் இன்று நடத்திய திடீர் சோதனையில், உதகை, கொலக்கம்பை, கோத்தகிரி, கூடலூரில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்ததற்காக மேலும் 7 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 5,47,100 ரூபாய் ரொக்கப் பணம், 18 காசோலை மற்றும் 11 பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

    இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இரு நபர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரியில் ஒட்டுமொத்தமாக காவல்துறையினர் 83 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில், 14 பேர் மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இதுபோன்று கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் 97898 00100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அம்மாவட்ட பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+