20 நாட்களாக ஆட்டம் காட்டிய T23 ஆட்கொல்லி புலி.. மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர்
நீலகிரி: மனிதர்களை வேட்டையாடி வந்த T-23 ஆட்கொல்லி புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை உயிருடன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் புலி ஒன்று 4 நபர்களையும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேடும் பணி தீவிரம்
T23 என அழைக்கப்படும் ஆட்கொல்லி புலி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த புலியை 2 வாரங்களுக்கு மேலாக வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், அதிரடிப் படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் ஆகியோர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மயமான புலி
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி காலை அந்த புலியானது சிங்கார வனப்பகுதியில் தென்பட்டது. அதன் பிறகு திடீரென கடந்த சில நாட்களாக அந்த புலி மாயமானது. இதனால் எங்கு அந்தப் புலி உயிரிழந்திருக்குமோ என அஞ்சப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்த புலி திடீரென வனத்துறை சிசிடிவி கேமராவில் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவானது. இதையடுத்து தேடுதல் வேட்டை மீண்டும் தீவிரமானது.

மயக்கமருந்து
புலி நடமாட்டம் உள்ள அதே பகுதியில் நான்கு இடங்களில் மரத்தின் மீது பரன்களை அமைத்து அதன் மீது கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் கண்காணித்து வந்தனர். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ட்ரோன் கேமராவை கொண்டும் கண்காணிப்பு பணி நடைபெற்றது. இந்தச் சூழலில் T-23 புலிக்குக் கடலூர் மசினக்குடி அருகே மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது
மேலும், மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியை உயிருடன் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நள்ளிரவில் மசினகுடி - முதுமலை சாலையில் அந்த புலி சென்று கொண்டிருந்த போது கால்நடை மருத்துவக் குழு 4 முறை மயக்க ஊசியைச் செலுத்தியது. அதில், இரண்டு ஊசிகள் T23 புலியின் உடம்பில் ஏறியது. இதையடுத்து புலி வனப்பகுதிக்குள் ஓடியது. புலியைப் பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications