உன் சேட்டையை என்கிட்ட காட்டாத..ஒழுங்கா ஓடி போயிரு.! காண்டான காட்டு யானை..சிங்கிளாய் விரட்டிய நாய்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் சாலையில் ஆக்ரோசமாக ஓடி வந்த காட்டு யானையை தெரு நாய் ஒன்று குரைத்தே காட்டுக்குள் விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் மான்கள் புலி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது கோடை காலம் நிலவிவரும் நிலையில் வனப்பகுதிகளை கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
காட்டு யானை: இதை அடுத்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதிகள் யானைகளும் அதிக அளவில் வசிப்பதால் அவை அடிக்கடி ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி காட்டுப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூடலூர் தொரப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் புகுகின்றனர்.
வனத்துறை: அவ்வாறு வரும் யானைகள் விவசாய பயிர்களையும் மக்கள் வசிக்கும் வீடுகளையும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் அகழி அமைத்திருந்தாலும் சில யானைகள் அகழியை கடந்து இரவில் ஊருக்குள் புகுந்து மீண்டும் காலையில் வனதிற்கு செல்வதை விளக்கமாகக் கொண்டுள்ளன.
ஊருக்குள் புகுந்த யானை: இரவு நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் அதனை தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானையை நாய் ஒன்று குரைத்தே காட்டுக்குள் விரட்டி அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று முதுமலை காட்டுப்பகுதியில் இருந்து தொரப்பள்ளி குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்தது.
விரட்டிய நாய்: காலை நேரத்தில் மைசூர் சாலையில் இந்த காட்டு யானை ஆக்ரோசத்துடன் சென்றது. இதனால் சாலையில் சென்றவர்கள் தெறித்து ஓடிய நிலையில் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது திடீரென அங்கு வந்த தெரு நாய் ஒன்று காட்டு யானையை பார்த்து குரைத்து விரட்டியது. இதனால் பயந்து போன அந்த யானை அங்கிருந்து வேகமாக ஓடியது. இருந்தும் அந்த நாய் அந்த யானையை விடாமல் துரத்தியது. தொரப்பள்ளி வன சோதனை சாவடியை கடந்து முதுமலை வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றதும் நாய் சாதரணமாக ஊருக்குள் வந்தது.












Click it and Unblock the Notifications