சாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்ததா புலி.. ஊட்டி அருகே பரபரப்பு.. ஆனால் விஷயம் வேறயாம்!
பிளேடு துண்டினை புலி சாப்பிட்டதால் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
ஊட்டி: சாம்பார் சாதம் சாப்பிட்டுதான் புலி இறந்துவிட்டதா என்ற நீலகிரி மாவட்ட மக்களின் 2 நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.
நீலகிரியில் உள்ள முதுமலையில் மொத்தம் 60 புலிகள்தான் இப்போதைக்கு உள்ளன. சில சமயம் உணவு தேடி கிராமப்பகுதிகளுக்கு வந்துவிடும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் புலி ஒன்று வனப்பகுதியின் எல்லையில், வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடப்பதை வன ஊழியர்கள் பார்த்தனர். இதை பற்றி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் சொன்னார்கள்
விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புலி எப்படி இறந்து போனது என்பது குறித்து விசாரணை ஆரம்பித்தனர். அந்த புலிக்கு கிட்டத்தட்ட 15 வயது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சாம்பார் சாதம் சாப்பிட்டதால்தான் புலி இறந்துவிட்டதாகவும், கிராமப்புறங்களுக்கு வருவதை தடுக்க யாராவது விஷம் வைத்திருப்பார்களா என்றெல்லாம் விஷயங்கள் பரவின.

எனினும், போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டால்தான் புலி எப்படி இறந்தது என்றே உறுதி செய்ய முடியும் என்று சொல்லப்பட்டது. அதன்படி நேற்று கால்நடை மருத்துவர்களை அழைத்து உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்திருக்கிறது. பசியில் இருந்த புலி, சாப்பிட எதுவும் கிடைக்காததால், குப்பைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. அந்த குப்பையில், துண்டு பிளேடு இருந்திருக்கிறது.
அது என்னவென்றே தெரியாமல் புலி சாப்பிட்டிருக்கிறது. வயிற்றுக்குள் சென்ற பிளேடு நாளுக்கு நாள் வேலை காட்டி வந்துள்ளது.. பிறகுதான் வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறது. ஒரு செ.மீ அளவுள்ள கூர்மையான பிளேடு வயிற்றுக்குள் இருந்தது வெளியே எடுக்கப்பட்டது.
குப்பையில் கண்டதையும் போடாதீங்கன்னு மக்களிடம் சொன்னால் எங்கே கேட்கிறார்கள். இன்று ஒரு கம்பீரமான புலியின் உயிரை இந்த துண்டு பிளேடு பறித்து விட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications