20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரியில் ஸ்ட்ராங்க் ரூம்-ன் சிசிடிவி செயல் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

What happened in that 20 mins DMK asks for Video recordings of Nilrgiris Strong room CCTV issue

இரண்டு வாரம் முன்பு 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு: மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் 69.71% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இல்லை: கடந்த முறை தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த இடங்களில் எல்லாம் வெளியே கட்சியினர் காவலுக்கு நின்றனர். திமுக, அதிமுக, பாமக, விசிகவினர் காவலுக்கு நின்றனர். திமுகவினர்தான் அதிகமாக அப்போது காவலுக்கு நின்றனர். ஆனால் இந்த முறை அப்படி காவலுக்கு நிற்கும் வழக்கம் இல்லை. இந்த முறை அப்படி யாரும் எங்கும் காவலுக்கு நிற்கவே இல்லை

கடந்த முறை போல திமுக இந்த முறை பெரிதாக பாதுகாப்பிற்கு ஆள் அனுப்பவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நீலகிரியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயல் இழந்து உள்ளது.

173 சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்து உள்ளன. இந்த கேமராக்கள் ஒரே நேரத்தில் வேலை செய்யாமல் போய் உள்ளன. 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை. 20 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி கேமராக்கள் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு அல்லது அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டு உள்ளார்.

திமுக பிளான்: நீலகிரியில் ஸ்ட்ராங்க் ரூம்-ன் சிசிடிவி செயல் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா செய்துள்ள போஸ்டில், ஸ்டிராங் ரூம் கேமராக்களிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கண்காணிப்பு அறையில் உள்ள டிவிக்களுக்கு வரும் தொடர்புதான் தடைபட்டதே தவிர, Recording தடைபடவில்லை. அந்த 18 நிமிட நேரத்துக்கான காட்சிப் பதிவை கோரி மனு அளித்துள்ளோம். கவலையுடன் என்னிடம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி., என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+