Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி மலர் கண்காட்சியில் என்ன ஸ்பெஷல்? ஹாலந்து நாட்டின் டுலீப் மலர் தொடங்கி ஆயிரக்கணக்கான பூக்கள்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: ஊட்டியில் இன்று தொடங்கியுள்ள மலர் கண்காட்சியில் ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப் மலர்கள் தொடங்கி
ஆயிரக்கணக்கான பூச்செடிகள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    நீலகிரி: 124வது உதகை மலர் கண்காட்சி... முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைப்பு!

    கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி புறப்படும் திட்டத்தில் இருப்பவர்கள்,நிச்சயம் அங்கு நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை பற்றி அறிந்தாக வேண்டும்.

    அதன் விவரம் வருமாறு;

    கோடைக்காலம்

    கோடைக்காலம்

    கோடை காலத்தில் நீலகிரியின் அழகினை ரசிக்க வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா
    பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கோடை விழாக்கள் ஆண்டுதோறும்
    நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த உதகை
    மலர்க்காட்சி திடலில் வண்ண மலர்களான டுலீப், சிம்பிடியம், புரோட்டியா, கேலா
    லில்லி மற்றும் மேரிகோல்ட் உள்ளிட்ட 275 வகை ரகங்கள் அடங்கிய வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சி

    மலர் கண்காட்சி

    மலர்க்காட்சி மாடத்திலுள்ள கொய்மலர்கள் அரங்கினையும், ஹெலிகோனியா மலர்
    அலங்காரங்களையும், ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப்
    மலர் செடிகளையும், சுமார் 52 வகையான மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர்
    மாடங்களையும், காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்,
    காட்டெருமை உள்ளிட்ட பிற அலங்காரங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

    கார்னேசன் மலர்கள்

    கார்னேசன் மலர்கள்


    மேலும், குழந்தைகள், சுற்றுலாப்பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும்
    கவரும் வகையில் சுமார் 4,500 தொட்டிச் செடிகளின் மூலம் அலங்கரிக்கப்பட்ட
    கண்ணாடி மாளிகையினையும், நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான
    பழங்குடி பெருமக்களான தோடர், இருளர், குரும்பர், பணியர், கோத்தர் மற்றும்
    காட்டு நாயக்கர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மலர்
    அலங்காரத்தினையும், தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, ஆந்தை, சுமார் ஒரு இலட்சம்
    கார்னேசன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக மலர் அலங்காரத்தில்
    அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்
    கட்டடம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

    200-ம் ஆண்டு

    200-ம் ஆண்டு


    உதகை 200-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை நினைவு கூறும் விதமாக "Ooty
    200" என்று மலர்களால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதையும், மலர்களால்
    வடிவமைக்கப்பட்டுள்ள "மீண்டும் மஞ்சப்பை" அலங்காரத்தையும், சுற்றுச்சூழல்
    துறையின் சார்பில் பிளாஸ்டிகிற்கு மாற்றாக "மீண்டும் மஞ்சப்பை" பயன்பாடு
    குறித்து அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அரங்கு மற்றும் தனியார்
    அரங்குகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

    முதல்வர் பார்வை

    முதல்வர் பார்வை


    நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை
    வேளாண்மை காட்சி திடல் மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தை குறிக்கும்
    நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத் துறையின் காட்சித் திடல்களை முதலமைச்சர் கண்டு களித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+