ஊட்டி அருகே வீட்டை உடைத்து உள்ளே வந்த காட்டு யானை.. பூசாரியை பார்த்ததும்.. நீங்களே பாருங்க
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி சந்தன மலை பகுதியில் காட்டுயானை ஒன்ற வீட்டை உடைத்ததால பரபரப்பு ஏற்பட்டது. கோவில் பூசாரியின் வீட்டை உடைத்த காட்டு யானையை, பூசாரி போ போ என விரட்டியதால் காட்டு யானை பின்னோக்கி நடந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவர்சோலை, ஓவேலி பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஓவேலி, பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவிலில் பகுதியில் நாளுக்கு நாள் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். நேற்று இரவு சந்தன மலைப்பகுதியில் உள்ள பூசாரி கிருஷ்ணன் வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்டதை அறிந்து கதவைத் திறந்தார். அப்போது பிரம்மாண்டமாக நின்றிருந்த காட்டு யானை வீட்டை உடைத்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டார். போ போ என ஓயாமல் கூச்சலிட்டதால் காட்டு யானை துதிக்கையை உயர்த்தி மெதுவாக பின்னோக்கி நடந்தது பின்பு வேறு பகுதிக்குச் சென்றது .

இந்த நேரடி காட்சிகள் வீடியோ செய்யப்பட்டு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனிடையே ஓவேலி பகுதியில் காட்டு யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. வனத்துறையினர் உடனடியாக மக்களை அச்சுறுத்துவரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
முன்னதாக கடந்த ஒரு வாரம் முன்பு கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் நடமாடிய மக்னா காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டபோது, நொடி பொழுதில் திடீரென திரும்பிய யானை மிகுந்த ஆக்ரோசத்துடன் பிளறியபடி வனத்துறையினரை துரத்தி தாக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறக்கூடிய மக்னா காட்டு யானை குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் உலா வருவது அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த ஒற்றை மக்னா காட்டு யானை குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென திரும்பிய காட்டு யானை வனத்துறையினரை நோக்கி மிகுந்த ஆக்ரோசத்துடன் பிளறியபடி துரத்தி தாக்க முயன்றது. இதனை அறிந்த வனத்துறையினர் அருகில் உள்ள கடைகளுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்த நிலையில், பின்னர் யானை அப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது. இந்த காட்சிகளை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதனால் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மக்னா காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அப்போது கோரிக்கை வைத்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications