வேணாம்மா.. ராத்திரியில் தனியா போகாதே.. தடுத்த தந்தை.. மனமுடைந்த மகள்.. தேவையில்லாத தற்கொலை!
கோத்தகிரி அருகே இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்
ஊட்டி: "வேணாம்மா.. நைட் நேரம்.. தனியா போகாதே.." என்று பெற்ற தந்தை சொல்லிவிட்டதால், மனமுடைந்த பிரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசித்து வந்தவர் சுந்தர்ராஜ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரியா.. 24 வயதாகிறது.. துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. சில நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பிரியாவுடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தோழியின் அப்பா இறந்துவிட்டார்.. அந்த தோழி சென்னையை சேர்ந்தவர்.. பிரியாவுக்கு நெருக்கமான தோழியும்கூட.. அதனால் அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள எண்ணினார்.
இதற்காக தன் அப்பாவிடம் அனுமதி கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.. "வேணாம்மா.. அவ்வளவு தூரம் எதுக்கு? தனியா போக வேண்டாம்" என்று கறாராக சொல்லி உள்ளதாக தெரிகிறது. அதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் உருளை கிழங்கு தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
இதில் சில நிமிடங்களிலேயே வாயில் நுரைதள்ளி கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறி போன அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications