Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துடித்துக் கொண்டிருந்த "கை" விரல்.. அலறியோடிய அதிகாரிகள்! மோடி பிரான்ஸ் சென்ற சமயத்தில் நடந்த பகீர்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்த சமயத்தில், அந்நாட்டின் அதிபருக்கு மிகவும் பயங்கரமான ஒரு கிப்ட் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உடனும் தனிப்பட்ட முறையில் மீட்டிங்கை நடத்தினார்.

 French President Emmanuel Macron received a Chopped finger in his mail

பிரதமரின் இந்தப் பயணித்ததில் பாதுகாப்பு, டெக்னாலஜி என்று பல்வேறு துறைகளில் இரு நாட்டிற்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக இந்தியாவின் யுபிஐ முறையை பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

கைவிரல்: இதற்கிடையே அங்கே ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. விளக்கக் குறிப்பு எதுவும் இல்லாமல் பிரான்ஸ் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிஸி கோட்டைக்கு இது அனுப்பப்பட்டுள்ளது. இதனை போலீசார் சோதனை செய்த போதுதான் அவர்கள் மிரண்டோ போய்விட்டனர்..

உள்ளே மனித விரலை வைத்து அனுப்பியுள்ளனர். அதிபருக்கு அனுப்பப்பட்ட பார்சலில் இப்படி மனித கைவிரல் இருந்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை. பிரான்ஸ் அதிபரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சோதனை: அந்த விரல் அழுகிப் போகும் முன்பு அதைச் சோதனை செய்ய வேண்டும் என்பதற்காக போலீசார் உடனடியாக அங்கிருந்த மினி பிரிட்ஜில் வைத்துள்ளனர். இந்த மினி பிரிட்டிஜில் தான் போலீசார் தங்கள் சினாக்ஸ்களை வைத்திருப்பார்களாம். இருப்பினும், விரல் அழுக தொடங்கிவிட்டால் அதில் இருந்து ஆதாரத்தைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதில் அதை உடனடியாக அங்கிருந்த பிரிட்ஜில் வைத்துள்ளனர்.

இதனை மருத்துவர்கள் சோதனை செய்த நிலையில், அது உயிருள்ள மனிதருக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அந்த விரலுக்குச் சொந்தமான மனிதரைக் கண்டுபிடித்த பிரான்ஸ் அதிகாரிகள் அவருக்குச் சிகிச்சைகளை அளித்தனர். இருப்பினும், அவராகவே விரலை அதிபருக்கு அனுப்பினாரா.. இல்லை அவரது விரல் வலுக்கட்டாயமாகக் கட் செய்யப்பட்டதா என்பது போன்ற தகவல்களை பிரான்ஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

எதிர்ப்பு: மேலும், மருத்துவ காரணங்களுக்காக அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.. வலதுசாரி தலைவரான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எந்தளவுக்கு அங்கே ஆதரவு இருக்கிறதோ.. அதே அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. இதனால் கடந்த காலங்களில் பல முறை அவருக்கு இதுபோன்ற விரும்ப தகாத கிப்ட்கள் வந்துள்ளன. இருப்பினும், மனித விரல் ஒன்று அவருக்கு பார்சலில் வருவது இதுவே முதல்முறையாகும்.

நேற்றைய தினம் அங்கே பிரான்ஸ் நாட்டில் பாஸ்டில் தின கொண்டாட்டம் நடந்தது. இந்த கொண்டாட்டத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த விபரீத பார்சல் அவருக்கு வந்துள்ளது. இந்த பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சிறப்பு விருந்தினராகக் கொண்டுள்ளார். இதில் இந்தியாவின் ரபேல் விமானங்களும் போர்க் கப்பல்களும் கூட கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+