நான் ஒரு பிரெஞ்ச்... பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பிரிட்டன் பிரதமரின் தந்தை
பாரீஸ்: பிரி்ட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் தான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறி பிரஞ்சு குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளார்,
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் இந்த முடிவை முன்னெடுத்து, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த முக்கிய தலைவர்களில் ஒருவர், இப்போது அந்நாட்டின் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன்.

ஸ்டான்லி ஜான்சன்
இருப்பினும், அவரது தந்தையும் முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டான்லி ஜான்சன் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக நடைபெற்ற தேர்தலிலும்கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டும் என்றே ஸ்டான்லி வாக்களித்திருந்தார்.

தெளிவாகப் புரிந்துகொண்டேன்
இந்நிலையில், தான் பிரான்ஸ் குடிமகன் என்றும் பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளது குறித்து ஸ்டான்லி கூறுகையில், "நான் இப்போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

உரிமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே
நான் ஒரு பிரெஞ்சு. என் அம்மா பிரான்சில் பிறந்தவர். அவரது தாயும் பாட்டியும் முற்றிலும் பிரெஞ்சுக்காரர்கள். எனவே, என்னைப் பொறுத்தவரை இது எனது உரிமையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

யாராலும் சொல்ல முடியாது
நான் எப்போதும் ஒரு ஐரோப்பியனாகவே இருப்பேன், அது நிச்சயம். பிரிட்டிஷ் மக்களிடம் நீங்கள் ஐரோப்பியர் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உறவு வைத்திருப்பதும் முக்கியமானது" என்றார்.

நாங்களே ஐரோப்பிய நாகரிகம்
இருப்பினும், இவரது மகன் போரிஸ் ஜான்சனே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முக்கிய காரணமாக இருந்தவர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு பேசிய போரிஸ் ஜான்சன், "எங்களின் இந்த முடிவை ஐரோப்பிய நாடாகப் பிரிட்டன் இனி இருக்காது என்று கருதத் தேவையில்லை. பல வழிகளிலும் நாங்கள் மிகச் சிறந்த ஒரு ஐரோப்பிய நாகரிகம், இனியும் அவ்வாறே இருப்போம்" என்றார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications