Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைன், காசாவில்.. அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த டெலிகிராம்! பாவெல் துரோவ் கைதுக்கான காரணமே இதுதான்

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இவரது கைதுக்கு காரணம், உக்ரைன் மற்றும் காசா போரில் அமெரிக்காவுக்கு எதிராக பரப்பப்பட்ட தகவல்கள்தான் என்று சொல்லப்படுகிறது.

பாவெல் துரோவ் அடிப்படையில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவராவார். ஆனால் ரஷ்யாவுக்கும் இவருக்குமே பெரிய அளவில் செட் ஆகாது. காரணம் டெலிகிராம்தான். ஊருக்குள்ள பத்து பதினஞ்சு ஆப் வெச்சிருக்கிற கூகுள் கூட நிம்மதியா இருக்கான்.. ஒரே ஒரு ஆப் வெச்சிக்கிட்டு.. என துரோவ் புலம்புவதற்கு முதல் காரணம் ரஷ்யாதான்.

Telegram Pavel Durov France

அதாவது கடந்த 2010ம் ஆண்டு, உக்ரைனில் டெலிகிராம் பயன்படுத்துபவர்கள், எந்த செய்திகளை பகிர்ந்துக்கொள்கிறார்கள்? என்கிற விவரங்களை ரஷ்யா கேட்டு ஏழரையை கூட்டியது. ஆனால், பயனாளர்களின் பிரைவசி ரொம்ப முக்கியம். எனவே, எங்களால் தகவல்களை தர முடியாது.. என துரோவ் வெளிப்படையாக மறுத்துவிட்டார். மட்டுமல்லாது, உள்ளூரில் இனி கடையை வைத்திருந்தால் நம்மை காலி செய்துவிடுவார்கள் என்று உணர்ந்த அவர், அமெரிக்காவுக்கு ஜம்ப்பாகிவிட்டார்.

அமெரிக்கா மட்டும் என்ன உத்தம புத்திரரா? கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி, டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் ஹாலுக்குள் நடத்திய கலவரம் டெலிகிராமில்தான் திட்டமிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்ட அந்த தனிநபர் தகவல்களை தங்களுக்கு தருமாறு கேட்டது ஜோ பைடன் நிர்வாகம். ஒருமுறை தகவல்களை கொடுத்துவிட்டால், எல்லா முறையும் இதையே மேற்கோள் காட்டி தகவல்களை பெற, பல்வேறு நாடுகளின் அரசுகள் முயற்சிக்கும் என்பதை உணர்ந்த துரோவ், அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து அங்கிருந்து வெளியேறிவிட்டார். தற்போது துபாயில் டெலிகிராம் தலைமை அலுவலகத்தை வைத்து நடத்தி வருகிறார்.

இதுதான் அவருடைய பின்னணி. இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரான்ஸ் வந்திருந்த அவர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாச பதிவுகள் போன்றவற்றிற்கு டெலிகிராம் செயலி காரணமாக இருக்கிறது என, ஏற்கெனவே பிரான்ஸ் அரசு அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருப்பினும் துரோவ் கைது செய்யப்படுவதற்கு இது உண்மையான காரணம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அப்படியெனில் உண்மை காரணம் என்ன? இதற்கு மூன்று விடைகள் சொல்லப்படுகிறது. முதல் விடை பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர். இந்த போரின் பின்னணி பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேல், அதற்கு அமெரிக்கா முழு உதவி அளித்து வருகிறது என்றும், காசாவில் அப்பாவி பொதுமக்கள் தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும் உலகம் முழுவதும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இதற்கு டெலிகிராம் முக்கிய காரணம்.

அதாவது காசாவில் அப்பாவி மக்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆதாரங்களாக வீடியோ இருக்கிறது. இந்த வீடியோக்கள் மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் அடிக்கடி வெளியாகி உலக நாடுகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோக்கள் முழுக்க முழுக்க டெலிகிராம் மூலமாகவே லீக் செய்யப்படுகின்றன. இதை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இரண்டாவது காரணம் உக்ரைன்-ரஷ்யா போர். இந்த போரில் உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுத உதவியை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இந்த போரில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்கவில்லை என்று கூறி வருகிறது. ஆனால்.. உக்ரைன் போர் முனையில் உயிரிழந்த நேட்டோ வீரர்களின் படங்கள் டெலிகிராமில் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது உக்ரைன் போரில் எங்கள் பங்களிப்பில்லை என்று அமெரிக்கா கூறிக்கொண்டே, எல்லைக்கு தொடர்ந்து வீரர்களை அனுப்புகிறது என ரஷ்யா, டெலிகிராம் உதவியுடன் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறது. இதனால், போர் குறித்து ரஷ்யாவுககு எதிரான கருத்தாக்கங்களை அமெரிக்காவால் உருவாக்க முடியவில்லை. இது சிஐஏவுக்கு பெரிய தோல்வி.

மூன்றாவது காரணம் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் படைகள் செய்த அட்டூழியம். இது தொடர்பான அனைத்து தகவல்களும் களத்திலிருந்து, எடுத்து டெலிகிராம் வழியாக உலக மக்களிடையே, ஆப்பிரிக்கா மக்கள் அம்பலப்படுத்தினர். இது பிரான்ஸுக்கு பேரடி. இதெல்லாம்தான், துரோவை கைது செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

தற்போது துரோவை மீட்க ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், துரோவிடம் பிரான்ஸ் குடியுரிமை இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது என பிரான்ஸ் கூறியுள்ளது.

இதையெல்லாம் துரோவ் எதிர்பார்த்ததுதான். எலான் மஸ்க், மார்க் ஜுகர்பெர்க் போன்று தனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதை துரோவ் ஏற்கெனவே உணர்ந்திருந்தார். இப்படி இருக்கையில் அவர் எதிர்பார்த்ததை போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+