பீகார் தேர்தல் கூட்டத்தில் புல்வாமா வீரர்களுக்கு அஞ்சலி.. காங்கிரஸ் மீது புகார்களை அடுக்கிய மோடி!
பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் புல்வாமாவில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.
பாட்னா: பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் புல்வாமாவில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பீகாரில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொண்டது.
இதில் பிரதமர் மோடி பீகாரின் வளர்ச்சி குறித்து பேசினார். பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல் கூட்டத்தில் புல்வாமாவில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. அவர் அஞ்சலி செலுத்திய போது அங்கிருந்த பாஜகவினர் கரகோஷம் செய்தனர். ஜெய் ஹிந்த், பாரத் மாதா கீ ஜே என்று கூச்சலிட்டனர்.

பாஜக ஆட்சி
அதன்பின் பேசிய மோடி, பீகாரில் கல்வியின்மையை பாஜக சரி செய்யும். பீகார் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதே பாஜகவின் நோக்கம். பீகார் இளைஞர்களுக்கு வரும் ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். பீகார் விவசாயிகள் பாஜக ஆட்சி மூலம் அதிக பலன் அடைந்துள்ளனர்.

நிறைய திட்டம்
விவசாயிகளுக்காக பாஜக நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பீகாரில் உள்ள பல அரசியல்வாதிகள் நிறைய ஊழல்களை செய்துள்ளனர். என்னை காங்கிரஸ் விமர்சனம் செய்ய முயல்கிறது: ஆனால் நான் உஷாராக உள்ளேன். காங்கிரஸ் விமர்சனங்கள் எதிர்கொள்ள எனக்கு தெரியும்.

ஊழல் பக்கம்
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் எந்த நல்லதும் நடக்காது. எதிர்க்கட்சியினர் மட்டுமே முன்னேறிக்கொண்டு இருப்பார்கள். லாலு பிரசாத் யாதவ் தொடங்கி ஊழல் செய்தவர்கள் எல்லோரும் எதிர்க்கட்சியின் பக்கம் இருக்கிறார்கள். பாஜக மக்கள் பக்கம் இருக்கிறது, என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications