தேர்தலுக்கு பிறகு நிலைமை மாறும்.. தேஜஸ்வி-சிராக் கூட்டணி அமையும்.. ஏபிபி-சிவோட்டர் சர்வே சொல்கிறது
பாட்னா: தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) பீகார் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைக்க கூடும் என்று 53% பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று என்று ஏபிபி-சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அதே நேரத்தில் 46.7% பேர் இருவருக்கும் இடையே எந்த கூட்டணியும் அமையாது என்று கருதுகின்றனர்.

சிராக் பாஸ்வான் பீகார் தேர்தலில் தனியாக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், ஒரு பக்கம் பிரதமர் மோடியை பாராட்டுகிறார். தேர்தலுக்கு பின்பு பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் பேசுகிறார். இந்த நிலைப்பாடு 57.7% வாக்காளர்களை குழப்பமடையச் செய்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
சிராக் பாஸ்வான், தேஜஸ்வியை "தம்பி" என்று குறிப்பிட்டு பரப்புரை செய்திருந்தார். ஜமுய் (சிராக் பாஸ்வானின் தொகுதி) தொகுயில் நடந்த ஒரு பேரணியில் தேஜஸ்வி பேசுகையில், நிதிஷ் குமாரை அதிகாரத்திலிருந்து அகற்ற, தேவைப்பட்டால் எல்ஜேபியுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், சிராக் பாஸ்வான்-தேஜஸ்வி யாதவ் கூட்டணி அமைப்பார்கள் என கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications