துணை ஜனாதிபதியாகும் நிதிஷ் குமார்? பாஜக தலைவர்கள் விருப்பம்.. பின்னணியில் பீகார் முதல்வர் பதவி
பாட்னா: உடல்நல பிரச்சனையை காரணம் காட்டி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அடுத்த ஜனாதிபதி யார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இந்நிலையில் தான் நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய ராஜ்யசபா தலைவராக இருக்கும் நம் நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார்.

தனது உடல்நலனை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெகதீப் தன்கரின் துணை ஜனாதிபதி பொறுப்பு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தான் துணை ஜனாதிபதி தேர்தலில் நிதிஷ் குமாரை வேட்பாளராக்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பாஜக தலைவர்களே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாகூர் பசோல் (பிஸ்ஃபி சட்டசபை தொகுதி) கூறுகையில், ‛‛நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாக ஆக்கப்படுவதை விட சிறந்தது என்ன இருக்க முடியும்? நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியானாலும், இல்லாவிட்டாலும், அனைவரும் அதை விரும்புகிறார்கள்'' என்றார்.
அதேபோல் நிதிஷ் குமாருக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்குவது பற்றிய கேள்விக்கு பீகாரில் அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த நீரஜ் குமார் சிங் பப்லுவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ‛‛நிதிஷ் குமார் துணை ஜனாதிபதியாவத நல்லது. அவர் துணை ஜனாதிபதியாவதில் எந்த தவறும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
பீகார் பாஜக தலைவர் நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது அவரை துணை ஜனாதிபதியாக்கவிட்டால் பீகாரில் முதல்வர் பதவியை பாஜக கைப்பற்றலாம் என்று கணக்கு போட்டு அவர்கள் இப்படி கூறி வருகின்றனர். ஏனென்றால் தற்போது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த கூட்டணிக்கு மொத்தம் 130 எம்எல்ஏக்கள் உள்ளனர். பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 124 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளன. எச்ஏஎம்(எஸ்) கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சைகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.
பாஜகவுக்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட நிதிஷ் குமாருக்காக முதல்வர் பதவியை அந்த கட்சி விட்டு கொடுத்துள்ளது. விரைவில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்கி விட்டால் பீகாரில் இந்த கூட்டணி வெல்லும் பட்சத்தில் முதல்வர் பதவியை பாஜகவால் கைப்பற்ற முடியும் என்பதால் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications