தேர்தல் உச்சம்... லாலு கட்சியில் இருந்து.... மூத்த தலைவர் ரகுவன்ஷ்.... ராஜினாமா!!
பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுவன்ஷ் பிரகாஷ் சிங் ராஜினாமா செய்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரகுவன்ஷ் சிங் லாலுவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சிறையில் இருக்கும் லாலுவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''ஜனநாயக் கர்புரி தாகூர் மரணத்துக்கு பின்னர் கடந்த 32 ஆண்டுகளாக உங்களுடன் இருந்துவிட்டேன். கட்சித் தலைவர்களின் மீது எனக்கு மிகுந்த பாசம் உள்ளது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ரகுவன்ஷ் சிங் ராஜினாமா செய்தார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த புதன் கிழமை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலின்போது, ஏற்பட்ட கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகனும், தற்போது அந்தக் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கட்சியால் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இதற்கு ரகுவன்ஷ் சிங் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
நீண்ட நாட்களாக கட்சியில் ரகுவன்ஷ் சிங் ஓரம் கட்டப்பட்டு வந்தார். கட்சியில் ராஜ்ய சபை சீட் கேட்டு வந்த நிலையில், இவருக்கு மறுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி, கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு பதிலாக கட்சியில் ராமா சிங் என்பவரை சேர்பதற்கு கட்சி எடுத்த முடிவை அடுத்து தானாக முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications