கேம்சேஞ்சர் அல்ல.. அசாதுதீன் ஓவைசிக்கு ஷாக் கொடுத்த இஸ்லாமியர்கள்.. இந்தியா கூட்டணிக்கு சாதகம்!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்ட நிலையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி குறைவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி, வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே பின் தங்கி இருப்பது பலரின் விவாதமாக மாறி இருக்கிறது.
பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நவம்பர் 11ஆம் தேதி 122 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடந்த வாக்குப்பதிவில், இம்முறை 66.91 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.

51 ஆண்டுகளுக்கு பின் பீகார் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி விரும்பியது. ஆனால் இந்தியா கூட்டணி தரப்பில் உரிய பதில் அளிக்கப்படாததால், தனித்து 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கும் தொகுதிகள் என்பதால், இந்தியா கூட்டணியின் வாக்குகள் அதிகளவில் பிரியும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் பீகார் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி கடந்துள்ள நிலையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 2 தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது அந்த தொகுதிகளில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தன. ஆனால் இம்முறை இஸ்லாமியர்களின் வாக்குகளை அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முழுமையாக அறுவடை செய்யவில்லை என்று பார்க்கப்படுகிறது.
கடந்த முறையே சில தொகுதிகளில் ஆர்ஜேடி கட்சியின் வேட்பாளர்களின் தோல்விக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி காரணமாக அமைந்தது. ஆனால் இம்முறை அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாக்களிப்பது மறைமுகமக என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டு வாக்களித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications