இந்த மனசுதான் கடவுள்! பீகார் ரயிலில் பிச்சையெடுத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்! தங்கமனசுக்காரர்!
பாட்னா: பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணிடம் ரயிலில் வந்தவர்கள் தவறாக நடந்து கொண்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்பாக இருந்த அந்த இளைஞர், இறுதியில் தனது வீட்டுக்கே அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாராம்.
பிச்சை எடுப்பவர்களை ஏளனமாகவும் கேவலமாகவும் பார்க்கும் இந்த சமூகத்தில் அவர்களும் மனிதர்கள், அவர்களது இயலாமையால்தான் பிச்சை எடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த இளைஞர் நடந்து கொண்டதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்ஸரைச் சேர்ந்த கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தார். அந்த பெண் இளம் வயது என்பதால் அவரிடம் சில பயணிகள் அவளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற விதமாகப் பார்த்ததாகவும் தெரிகிறது.
இதனால் அந்த பெண் சங்கடமடைந்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிய கோலு யாதவ், அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.
பக்ஸருக்குத் திரும்பியதும், கோலு யாதவ் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி தனது பெற்றோரிடம் விளக்கினார். அந்த பெண் எங்கிருந்து வந்தாள், அவளின் கஷ்டங்கள் என்ன என்று புரிந்து கொண்ட குடும்பத்தினர், அவளுக்கு அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெற்றோரின் முழு சம்மதத்துடன், கோலு யாதவ் அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, பலரின் கவனத்தை ஈர்த்தன. ரெடிட் தளத்தில், "இது ஒரு அழகான திரைப்படம் போல இருக்கிறது" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்தப் படங்களைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
ஒரு பயனர், "அக்ஷய் குமார் இப்போது இந்தக் கதையைப் படமாக எடுப்பார்" என்று எழுதியிருந்தார். இன்னொருவர், "அவர் அந்தப் பெண்ணின் வாழ்க்கையைச் சரி செய்ததுடன், தங்கள் இருவரின் வாழ்க்கையையும் ஒன்றிணைத்தார். இது ஒரு பாலிவுட் படம் போலவே இருக்கிறது" என்று ஆச்சரியப்பட்டார்.
இன்னும் சிலர் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என கருத்து பதிவிட்டுள்ளனர். யாசகம் கேட்போர் நம்மை தொட்டு யாசகம் கேட்டால் கூட அவர்களை பார்வையாலேயே சுட்டெரித்து விடுகிறோம். ஆனால் இந்த இளைஞருக்கு எத்தனை பெரிய மனம் வேண்டும்.
அதை விட அவரது பெற்றோர் இந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள எவ்வளவு பெரிய மனசு தேவை? காதலித்தாலே ஜாதி, அந்தஸ்து பார்த்து வரும் இந்த காலத்தில் பிச்சையெடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு புது வாழ்வு கொடுத்த கோலு யாதவுக்கும் அந்த பெண்ணுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம். வாழ்த்துக்கள் சகோதரா! இல்லறம் நல்லறமாகட்டும்!












Click it and Unblock the Notifications