பாஜகவின் கிளை தேர்தல் ஆணையம்.. தேஜஸ்வி முதல்வரானாலும் ஆச்சரியமில்லை.. சிவசேனா தாக்கு
பாட்னா: பாஜகவின் கிளையாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நாளையே கூட தேஜஸ்வி யாதவை முதல்வராக்கினால் கூட ஆச்சரியப்பட முடியாது என்று சிவசேனா கூறியுள்ளது.
பீகார் தேர்தல் தொடர்பாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், பீகார் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக உள்ளதாக இன்னும் மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர்.

நாளையே பீகார் முதல்வராக தேஜஸ்வி யாதவை இவர்கள் அறிவித்தால் கூட ஆச்சரியப்பட முடியாது. பீகார் போன்ற ஒரு பெரிய மாநிலத்தில், குடும்பத்தினர் அனைவரும் சிறையில் உள்ள நிலையில், பெரிய பின்புலம் இல்லாத ஒரு இளைஞர், சிபிஐ, ஐடி வழக்குகள் சூழ்ந்துள்ள ஒருவர் அனைவரையும் எதிர்த்து நிற்கிறார் என்றால், என்ன நடக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாளையே இவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்று கூறி தேஜஸ்வியை முதல்வராக்கினால் கூட அதிர்ச்சி அடைய தேவையில்லை... ஆனால் மக்கள்தான் பாவம் தேர்தல் நியாயமாக நடைபெறுவதாக எண்ணிக் கொண்டுள்ளனர்.
பாஜகவின் கிளையாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது.. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. பீகார் தேர்தலில் கொரோனா தடுப்பு மருந்தை வாக்குறுதியாக பாஜக அறிவித்தது தேர்தல் விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம். எனவே அவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் சஞ்சய் ராவத்.
சஞ்சய் ராவத் சொல்லும்போது, பீகார் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக உள்ளதாக இன்னும் மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications