பக்கத்தில் யாருமே இல்லை.. தானாகவே மேலே போகுதாம்.. கீழே வருதாம்.. என்னாச்சு.. பரபர வீடியோ
ஜான்சி பூங்காவில் பேய் இருப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
பாட்னா: தானாகவே மேலே போகுதாம்.. கீழே வருதாம்.. ஒரு பார்க்கில் வைக்கப்பட்டிருந்த புல்-அப் மிஷின்களை கண்டு பொதுமக்கள் அலறி ஓடி உள்ளனர்.. பேய்கள் வந்து எக்சர்ஸைஸ் செய்வதாக வாட்ஸ்அப்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் எடுக்கப்பட்ட வீடியோ இது. ஜான்சி, நந்தன்பூராவில் கன்ஷிராம் என்ற பார்க் உள்ளது.. இங்கு 2 புல் - அப்ஸ் இயந்திரங்கள் தானாகவே மேலே போய் கீழே இறங்கி கொண்டிருக்கின்றன.
பக்கத்தில் யாருமே இல்லை.. அதை பார்த்து பார்க்கில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடி உள்ளனர்.. ஆனால் ஓடவும், ஒளியவும் முடியாமல் அந்த பூங்காவில் உள்ள செக்யூரிட்டிகள் மிரண்டு வியந்து அவைகளை பார்த்து கொண்டு நின்றிருக்கிறார்கள்.. இந்த வீடியோ மொத்தம் 20 செகண்ட் ஓடுகிறது.
வெயிட் அதிகமாக உள்ள புல்-அப்ஸ் மிஷினை மனிதர்களால்தான் அசைக்க முடியும். ஆனால் இது எப்படி தானாகவே மேலேயும், கீழேயும் போய் கொண்டிருக்கின்றன என தெரியவில்லை.. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எல்லா சோஷியல் மீடியாவிலும் இந்த வீடியோதான் வேகமாக பரவி வருகிறது.. "பேய்கள் ஜிம் எக்ஸர்சைஸ் செய்கின்றன" என்று வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
என்னதிது.. வெள்ளையா பெருசா.. பக்கத்துலயே சுடுகாடு வேறு இருக்காமே.. அலறி ஓடிய ஈரோட்டு மக்கள்!
இந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கும் போயுள்ளது.. அதனால் அந்த பார்க்கிற்கு உடனடியாக போலீசார் சென்றிருக்கிறார்கள்.. ஓபன் கிரவுண்டில் உள்ள அந்த 2 புல்-அப்ஸ் இயந்திரங்களுக்கு நிறைய கிரீஸ் பூசியிருக்கிறார்கள்.
அதனால்தான் ஒருமுறை இயக்கினாலேயே அந்த இழுவையால் அடுத்த சில வினாடிகளுக்கு அந்த இயந்திரம் மேலும் கீழுமாக அசைகிறது என்பது தெரியவந்தது.. இந்த வீடியோவை எடுத்து பேய் என்று சொன்னது யார்?
பேய்கள் ஜிம் பயிற்சி செய்கின்றன என்று அதற்கு ஒரு கேப்ஷனையும் போட்டு ஷேர் செய்தது யார்? என போலீசார் அவர்களைதான் தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் பேய் என்றதும் இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.