இந்தியாவையே உலுக்கிய போட்டோ.. 2 ரயில் பெட்டிகள் இடையே பிதுங்கி பலியான ரயில்வே ஊழியர்! காரணம் என்ன?
பாட்னா: ரயில் பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலியான போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்த நிலையில் தற்போது ரயில்வே ஊழியர் ரயில் பேட்டி - இன்ஜின் இடையே சிக்கி உடல் நசுங்கி பலியானதற்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சக ஊழியருடனான ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு லக்னோ - பராணி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 15204 ) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பராணி ரயில் நிலையத்துக்கு வந்தது.

அப்போது சமஸ்தீர்பூர் மாவட்டம் தால்சிங்சாராய் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் அருண் குமார் ராவத் (வயது 35),
முகமது சுலைமான் ஆகியோர் பாயிண்ட் மேன்களாக பணியில் இருந்தனர்.
இவர்கள் 2 பேரும் லக்னோ - பராணி ரயிலில் இருந்து கப்ளிங் பிரிக்கும் பணியை தொடங்கினர். அருண் குமார் ராவத் ரயிலில் பார்சல் பெட்டி மற்றும் இன்ஜினை இணைக்கும் வகையில் ‛கப்ளிங்கை' கழற்றினார். முகமது சுலைமான், அருண் குமார் ராவத்தின் பணி பற்றி ரயில் லோகோ பைலட்டுக்கு சிக்னல் கொடுத்து வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜினை இயக்கிய டிரைவர் முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி இயக்கினார். அப்போது இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே அருண் குமார் ராவத் சிக்கினார். அவரது உடல் நசுங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்த உடன் இன்ஜின் டிரைவர் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்.

ரயில் பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கி அருண் குமார் ராவத் பலியாகி இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த போட்டோக்கள் அனைவரின் இதயத்தையும் நொறுக்கி உள்ளது. இதுபற்றி இதுபற்றி சோனப்பூர் டிஆர்எம் அதிகாரிகள் மட்ட அளவில் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் குழு விசாரணையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 5 அதிகாரிகள் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கையில் தான் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஊழியர்களிடையே தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முகமது சுலைமானின் கவனக்குறைவால் தான் விபத்து ஏற்பட்டு அருண் குமார் ராவத் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது லக்னோ - பராணி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:10 மணிக்கு பராணி சந்திப்பிற்கு வந்தது. காலை 8:29 மணிக்கு இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து ரயில் நிலைய கேமராவில் பதிவாகி உள்ளது. இன்ஜின் மற்றும் பெட்டிகளின் நடுவே 'கப்ளிங்'கை கழற்றிய அருண் குமாரின் நிலை குறித்து சக பணியாளரான முகமது சுலைமான், இன்ஜின் டிரைவருக்கு உரிய தகவல் தரவில்லை. அவர் பணியில் அலட்சியமாக செயல்பட்டார். அதேபோல் 'அதேபோல், 'கப்ளிங்' கழற்றப்பட்டது தொடர்பான உறுதியான தகவலை பெறாமலேயே இன்ஜின் டிரைவர் ரயிலை இயக்கியுள்ளார்.
முகமது சுலைமான் மற்றும் இன்ஜின் டிரைவர் இடையிலான தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததால் அருண் குமார் பலியானார்' என, கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையின்போது முகமது சுலைமான் இன்ஜின் டிரைவர் மீது எழுத்துப்பூர்வமாக குற்றம்சாட்டி உள்ளார். அதாவது நான் கையால் எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. ஆனால் இன்ஜின் டிரைவர் ரயிலை பின்நோக்கி இயக்கி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் அருண் குமார் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே முகமது சுலைமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருண் குமார் ராவத்தின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து உண்மையில் யார் மீது தவறு என்பதை கண்டறிய ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்னொரு அதிகாரிகள் அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications