ஜட்டியுடன் ரயிலில் உலா வந்த எம்எல்ஏ.. கொந்தளித்த பயணிகள்.. வைரலாகும் போட்டோ..!
ஜேடியூ எம்எல்ஏ ரயிலில் ஜட்டியுடன் நடந்த போட்டோ வைரலாகிறது
பாட்னா: எம்எல்ஏ ஒருவர் ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் போன போட்டோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது... இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பாட்னாவில் இருந்து தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஒன்று டெல்லி சென்றுள்ளது.. அந்த ரயிலின் ஏசி பெட்டியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏவான கோபால் மண்டல் என்பவர் பயணம் செய்தார்.
இந்த பயணத்தின்போதுதான், திடீரென எம்எல்ஏ தன்னுடைய டிரஸ்ஸை களைந்துவிட்டு, ஜட்டி பனியனுடன் ரயிலுக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.. அப்போது இதை பார்த்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்..

அநாகரீகம்
இத்தனை பேர் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, அதுவும் பொதுவெளியில் ஒருவர் இப்படி ஏன் நடந்து கொண்டிருக்கிறார்? என்று பயணிகள் முகம் சுளிக்க ஆரம்பித்தனர்.. இந்த அநாகரீகத்தை பொறுத்து கொள்ள முடியாத ஒருசில பயணிகள் எரிச்சலடைந்தனர்.. இதைபற்றி சிலர் எம்எல்ஏவிடமே கேட்டு விட்டனர்.. ஆனால், அவர் எம்எல்ஏ என்று அந்த பயணிகளுக்கு தெரியாது..

எம்எல்ஏ
அவர் எம்எல்ஏ என்று தெரியாமலேயே கேள்விகளை கேட்டனர்.. எனினும், பயணிகளின் கேள்விக்கு எம்எல்ஏ சரியாக பதிலளிக்கவில்லை என்றே தெரிகிறது.. இதனால், வாக்குவாதம் முற்றியது.. பிரச்சனை பெரிதாக வெடிக்க தொடங்கயிது.. அப்போது அந்த நேரம் டிக்கெட் பரிசோதகர் வந்தார்.. மேலும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் வந்துவிட்டனர்.. அப்போதுதான் அவர் எம்எல்ஏ என்றே அங்குள்ளவர்களுக்கு தெரியவந்தது.

புகார்
இறுதியில் எம்எல்ஏவின் இந்த அநாகரீக நடவடிக்கை குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடமும் பயணிகள் புகார் தந்தனர்.. அப்போது இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.. பிரச்சனை ஓய்ந்தாலும், எம்எல்ஏ ஜட்டி, பனியனில் ரயிலுக்குள் வீரநடை போட்ட போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

விளக்கம்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ ஒரு விளக்கம் தந்துள்ளார்.. அதில், "ரயிலில் ஏறியதில் இருந்தே எனக்கு வயிற்று வலி.. கடுமையான வயிற்று போக்கு இருந்து கொண்டே இருந்தது.. அதனால் தான் ஜட்டி பனியனில் இருந்தேன்... இதுதான் உண்மை.. நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications