ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்
பாட்னா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு சமூகங்களுக்கு 83% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாநிலங்களில் இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு அளித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டு வருகிறது.

ஜார்க்கண்ட் தேர்தல்
தற்போது நவம்பர்- டிசம்பரில் ஜார்க்கண்ட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்று பீகாரில் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் வியூகம் வகுத்துள்ளது.

ஜார்க்கண்ட்டில் 83% இடஒதுக்கீடு
இதனிடையே ராஞ்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் ஜார்க்கண்ட் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 83% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

83% இடஒதுக்கீடு விவரம்
அதாவது பழங்குடியினருக்கு 32%; தலித்துகளுக்கு 14%; இதரபிற்படுத்தப்பட்டோருக்கு 27%; முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% என மொத்தம் 83% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிறது அத்தீர்மானம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது 60% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கு 26%; தலித்துகளுக்கு 10%; இதரபிற்படுத்தப்பட்டோருக்கு 14%; முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் 82% இடஒதுக்கீடு
இதில்தான் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது ஐக்கிய ஜனதா தளம். அண்மையில் சத்தீஸ்கரில் 82% இடஒதுக்கீடு வழங்குவதாக அம்மாநில காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%; பழங்குடியினருக்கு 32%; தலித்துகளுக்கு 13%; முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% என மொத்தம் 82% இடஒதுக்கீடு வழங்குகிறது சத்தீஸ்கர் அரசு.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications