மட்டன் சமைக்க தாமதம்.. மனைவி மீது ஆத்திரம்.. 4 வயது மகளை அடித்துக் கொன்ற கொடூரத் தந்தை!

மகளை கொன்ற தந்தையை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மட்டன் சமைக்க தாமதம், 4 வயது மகளை கொன்ற தந்தை!

    பாட்னா: மட்டன் சமைத்து தர தாமதம் செய்ததால் மனைவி மீது கோபம் கொண்ட கணவர், நான்கு வயது மகளைக் கொலை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகாரின் பகிர்டோலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாம்பு லால் சர்மா (40). குஜராத்தில் வேலை பார்த்து வந்த சாம்பு, திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்திருந்தார். கடந்த புதனன்று, மட்டன் சமைக்கும்படி தன் மனைவியிடம் கூறியிருந்தார் சாம்பு.

    man kills daughter after wife takes too long to cook

    ஆனால், உணவைச் சமைக்க தாமதமானது. இதனால் மனைவி மீது சாம்புவிற்கு கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தில் தனது நான்கு வயது மகளை அவர் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்பு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். ஆனால், சாம்புவை சுற்றி வளைத்த மக்கள், போலீசிடம் அவரை ஒப்படைத்தனர். தற்போது சாம்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+