Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரை தட்டி தூக்கும் பாஜக கூட்டணி.. ‛இந்தியா’ கூட்டணிக்கு விழும் பெரிய அடி.. பரபர சர்வே முடிவு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: லோக்சா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை பெறும் என்பது குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பீகாரில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்த கருத்துக்கணிப்பை தற்போது 'மார்த்ருபூமி செய்தி - P MARQ சர்வே' வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றதைப் போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.

Marthrubhumi News - P MARQ Survey has released a opinion poll on which party will dominate in Bihar Lok Sabha elections

பீகார் மாநிலத்தை பொறுத்த அளவில் 40 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இது அம்மாநில எதிர்க் கட்சிகளிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளன. பிரதமர் மோடி அடிக்கடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவே 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

மாநில அரசில் தன்மையை பொறுத்த அளவில் பிரதான கட்சியாக ஐக்கிய ஜனதாதளம் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இக்கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்த பாஜக பாஜக 17 தொகுதிகளில் வென்றது. இது தவிர லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது.

இந்நிலையில், இந்த முறை எந்த கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்த கருத்துக்கணிப்பை மார்த்ருபூமி செய்தி - P MARQ சர்வே' வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 32-38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 2-10 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சூழல்: பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமாரின் அரசியல் செயல்பாடுகள் சமீப காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார்.

ஆனால், மீண்டு பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டார். இவரது நிலைத்தன்மையற்ற அரசியல் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதுவே பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு இந்த முறை எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே மத்திய இணையமைச்சராக இருந்த இக்கட்சியின் தலைவரான பசுபதி குமார் பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறர்.

லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில், பீகாரும் உத்தரப் பிரதேசமும் மிகவும் முக்கியமானவை. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 120 தொகுதிகள் வருகின்றன. எனவே இந்த மாநிலங்களில் காங்கிரஸ், பீகார் என இரண்டு கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+