Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாணக்கியர் நிதிஷ்.. பாஜகவை வீழ்த்த உ.பி.யில் "விதை.." "அந்த 2 தொகுதி!" அகிலேஷுடன் சேர்ந்து ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: 2024 மக்களவைத் தேர்தலுக்கு குறிவைக்கும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பேசி உத்தரப்பிரதேசத்தில் 2 தொகுதிகளில் வாய்ப்பு கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக வியூகம் வகுக்க சில வாரங்கள் முன் பாட்னாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் நிதீஷ் குமார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தீவிரமாக காய்நகர்த்தி வரும் அவர், உத்தரப்பிரதேசத்திற்கும் கண் வைத்து உள்ளார்.

Nitish Kumar targets Delhi liked to contest in UP alliance with Samajwadi

அந்த வகையில் உபியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு சீட்டுகளை வாங்க அவர் முடிவு செய்துள்ளாராம். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள புல்பூர் மற்றும் பிரதாப்கர் தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது.

அதில் புல்பூர் தொகுதில் நிதீஷ் குமாரே நேரடியாக போட்டியிடவும் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மையாக வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களான குர்மி மற்றும் யாதவ் சமூக மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்பது நிதீஷ் குமாரின் நம்பிக்கை. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உபியில் பெரிய வாக்கு வங்கி இல்லை.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அக்கட்சி வெறும் 0.01% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், பிரதமர் கனவோடு இருக்கும் நிதீஷ்குமார் தனது சொந்த மாநிலத்தை கடந்து உபியில் போட்டியிட்டு டெல்லி கோட்டைக்கு தாவ முயற்சிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் புல்பூர் தொகுதியை கேட்பதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.

ஆம், அந்த தொகுதி இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் விபி சிங் ஆகியோர் போட்டியிட்டதாகும். நிதீஷ் குமார் தனது தலைவராக போற்றும் சோசலிசவாதியான ராம் மனோகர் லோஹியாவும் இந்த புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். எனவே செண்டிமெண்ட் பார்த்து அவர் இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.

உபியில் யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பகுஜன் சமாஜ் கட்சியில் முன்பு இருந்ததாகவும், பாஜகவின் வளர்ச்சிக்கு பிறகு அவர்கள் அக்கட்சிக்கு தாவிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களை சமாஜ்வாடிக்கு அழைத்து வர அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஒருவேளை நிதீஷ் குமார் புல்பூரில் போட்டியிட்டால் இந்த பிரச்சனை தீரலாம் என்கிறார் ஜேடியு மூத்த தலைவர் ஒருவர்.

நிதீஷ் குமாரின் குர்மி சமூக மக்கள் கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிரதேசத்தில் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். சமாஜ்வாடி, ஜேடியு இடையே கூட்டணி ஓரளவு உறுதியாகிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தனது விருப்பத்தை அகிலேஷின் காதில்போட நிதீஷ் குமார் தரப்பு முடிவு செய்து இருக்கிறதாம்.

ஐக்கிய ஜனதா தளம் தேசிய செய்தித்தொடர்பாளர் கேசி தியாகி தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் நிதீஷ் குமார் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். எந்த இடத்தில் போட்டியிட வேண்டும் என நிதீஷ் குமார் முடிவு செய்யவில்லை. புல்பூரில் போட்டியிட விரும்பினால் அது பற்றி அவர் தெரிவிப்பார்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+