RJD ஆட்சியில் ஒரு பள்ளியாவது திறக்கப்பட்டதா...? உன் அப்பாவிடம் கேள்.. தேஜஸ்வி மீது நிதிஷ் தாக்கு..!
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த போது பீகாரில் ஒரு பள்ளியையாவது திறந்ததுண்டா என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சி, அதிகாரம் என கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஊழல் செய்வதற்கு மட்டுமே ஆர்.ஜே.டி. பயன்படுத்திக் கொண்டதாக நிதிஷ் சாடியுள்ளார். வழக்கமாக கூலாக பிரச்சாரம் செய்யக்கூடிய நிதிஷ்குமார் இந்த தேர்தலை பொறுத்தவரை சற்று சூடான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி வருகிறார்.

இதற்கு காரணம் பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் அவருக்கு கடுமையான முறையில் போட்டி கொடுத்து வருகிறார். கொஞ்சம் அசந்தாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால் நிதிஷ் தனது தூக்கத்தை தொலைத்து தேர்தல் பணிகளில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே பீகார் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. லாலுவும் அவரது மனைவி ராப்ரி தேவியும் பீகார் முதலமைச்சராக இருந்தபோது ஒரு பள்ளிக்கூடமாவது கட்டியிருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த வரலாறை எல்லாம் உங்கள் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பிறகு பிரச்சாரம் செய்யுங்கள் என தேஜஸ்வி யாதவை சீண்டியுள்ளார் நிதிஷ்குமார். தமது ஆட்சியில் ஊழல்வாதி என யாரேனும் ஒருவரையாவது உங்களால் கை நீட்ட முடியுமா என ஆர்.ஜே.டி. கட்சியினருக்கு கேள்வி எழுப்பிய நிதிஷ், நேர்மையான முறையில் ஆட்சி புரிந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தக் கருத்துக்கு பதிலடி தந்துள்ள தேஜஸ்வி யாதவ், நிதிஷ் ஜீயின் இந்த பழமையான பேச்சைக் கேட்டு கேட்டு பீகார் மக்கள் சலிப்படைந்து விட்டதாகவும், யதார்த்த நிலையில் இருந்து நிதிஷ்குமார் விலகி நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், கோடிக்கணக்கான பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டு இப்போது பழைய புராணத்தை மீண்டும் பாடத்தொடங்கியுள்ளதாக நிதிஷை விமர்சித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications